search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கொரோனா வார்டு
    X
    கொரோனா வார்டு

    அவினாசியில் கொரோனா வார்டு திறப்பு

    அவினாசியில் 250 படுக்கை உள்ளிட்ட வசதிகளுடன் மீண்டும் தனியார் கல்லூரியில் கொரோனா வார்டு திறக்கப்பட்டுள்ளது.
    அவினாசி:

    அவினாசி சுற்றுவட்டாரப்பகுதிகளில் தற்போது கொரோனா தொற்றுப் பரவல் அதிகரித்து வருகிறது. கடந்த ஆண்டு அதிக அளவில் கொரோனா தாக்கம் இருந்ததால் அவினாசி ஒன்றியம் பழங்கரை ஊராட்சியில் உள்ள தனியார் கல்லூரியில் கொரோனா பாதிக்கப்பட்டவர்கள் சிகிச்சைக்காக சிறப்பு வார்டு அமைக்கப்பட்டிருந்தது. அவினாசி சுற்றுவட்டாரப் பகுதியில் தொற்று பாதித்தவர்கள் இங்கு சிகிச்சை பெற்று திரும்பினர்.

    இந்த நிலையில் தொற்று பரவல் கட்டுக்குள் வந்ததால் சில மாதங்களுக்கு முன்பு சிறப்பு வார்டு மூடப்பட்டது. தற்போது மீண்டும் கொரோனா வேகமாக பரவும் நிலை உள்ளது. எனவே 250 படுக்கை உள்ளிட்ட வசதிகளுடன் மீண்டும் தனியார் கல்லூரியில் கொரோனா வார்டு திறக்கப்பட்டுள்ளது. தற்போது 2 பேர் மட்டும் இங்கு சிகிச்சையில் இருப்பதாக மருத்துவ அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
    Next Story
    ×