என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
முத்துப்பேட்டை அருகே குளத்தில் தவறி விழுந்து தொழிலாளி பலி
Byமாலை மலர்9 April 2021 6:23 PM GMT (Updated: 9 April 2021 6:23 PM GMT)
முத்துப்பேட்டை அருகே குளத்தில் தவறி விழுந்து தொழிலாளி உயிரிழந்தார்.இதுதொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
முத்துப்பேட்டை:
திருவாரூர் மாவட்டம் உதயமார்த்தாண்டபுரம் நாச்சிகுளம் வயல் பகுதியில் ராமநாதபுரம் பகுதியை சேர்ந்தவர்கள் ஆட்டுக் கிடை போட்டு மேய்த்துக்கொண்டிருந்தனர்.
இந்தநிலையில் இந்த ஆட்டுக்கிடையில் ஆடுகளை மேய்க்கும் தொழிலாளி ராமநாதபுரம் கீழக்கரையை சேர்ந்த வெள்ளையன் (வயது 45) என்பவரை நீண்டநேரமாக காணவில்லை இதனையடுத்து கூட இருந்த மற்றவர்கள் அவரை தேடியபோது அப்பகுதியில் உள்ள மாங்குளம் கரையில் அவரது செல்போன் கிடந்துள்ளது. இதனால் சந்தேகம் அடைந்த அவர்கள், குளத்தில் தேடி பார்த்தபோது வெள்ளையன் உடல் மிதந்துள்ளது.
சம்பவத்தன்று வெள்ளையன் மாங்குளத்தில் குளித்து கொண்டிருந்த போது மயக்கம் ஏற்பட்டு தவறி குளத்தில் விழுந்து இறந்திருக்கலாம் என கூறப்படுகிறது.
இதுகுறித்து தகவல் அறிந்த முத்துப்பேட்டை போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து வெள்ளையன் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக திருத்துறைப்பூண்டி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இதுகுறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X