என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
குடோன் மேலாளரின் கார் கண்ணாடியை உடைத்து ரூ.1 லட்சம் திருட்டு
Byமாலை மலர்9 April 2021 1:22 AM GMT (Updated: 9 April 2021 1:22 AM GMT)
குடோன் மேலாளரின் கார் கண்ணாடியை உடைத்து ரூ.1 லட்சம் திருட்டு சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
செங்குன்றம்:
சென்னை தியாகராயநகர் வெங்கட்டராமன் சாலையை சேர்ந்தவர் ராம்குமார் (வயது 50). இவர், சோழவரம் பகுதியில் உள்ள தனியார் குடோன் ஒன்றில் மேலாளராக வேலை செய்து வருகிறார். இந்த குடோனில் பணியாற்றும் ஊழியர்களுக்கு சம்பளம் கொடுப்பதற்காக ரூ.1 லட்சத்து 10 ஆயிரத்துடன் காரில் சோழவரத்துக்கு வந்து கொண்டிருந்தார். மதிய உணவு சாப்பிடுவதற்காக சென்னை-கொல்கத்தா தேசிய நெடுஞ்சாலையில் செம்புலிவரம் கிராமம் அருகே உள்ள ஓட்டல் முன்பு காரை நிறுத்தி விட்டு சாப்பிட்டார்.
பின்னர் காரில் ஏற வந்தபோது, கார் கண்ணாடி உடைக்கப்பட்டு இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார். கார் கதவை திறந்து பார்த்தபோது அதில் இருந்த ரூ.1 லட்சத்து 10 ஆயிரம் மற்றும் காசோலைகளை மர்மநபர்கள் திருடிச் சென்றிருப்பது தெரியவந்தது. இது குறித்து சோழவரம் போலீசில் ராம்குமார் புகார் செய்தார். அதன் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து சம்பவ இடத்தில் உள்ள கண்காணிப்பு கேமரா காட்சிகளை ஆய்வு செய்து மர்மநபர்களை தேடி வருகின்றனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X