என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
ஆவூர் அருகே சுங்கச்சாவடி ஊழியர்கள் 3 பேர் கைது
Byமாலை மலர்4 April 2021 10:22 AM GMT (Updated: 4 April 2021 10:22 AM GMT)
ஆவூர் அருகே லாரி டிரைவரை தாக்கிய சுங்கச்சாவடி ஊழியர்கள் 3 பேர் கைது செய்யப்பட்டனர்.
ஆவூர்:
சேலம் மாவட்டம், களக்காடு பகுதியை சேர்ந்தவர் ரமேஷ்குமார் (வயது 33). லாரி டிரைவரான இவர் நேற்று முன்தினம் இரவு லாரியில் சிவகங்கை மாவட்டம் தேவகோட்டையில் இருந்து கரும்பு ஏற்றிக்கொண்டு திருச்சிக்கு வந்து கொண்டிருந்தார்.
திருச்சி-புதுக்கோட்டை சாலையில் தொண்டைமான்நல்லூர் சுங்கச்சாவடிக்கு லாரி வந்தவுடன் அங்கு சுங்கக்கட்டணத்தை செலுத்திவிட்டு டிரைவர் ரமேஷ்குமார் லாரியை எடுத்தார். அப்போது சுங்கச்சாவடி மேற்கூரையில் லாரியில் இருந்த கரும்பு உரசியது. இதனால் சுங்கச்சாவடி ஊழியர்களுக்கும், லாரி டிரைவருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டது.
அப்போது அங்கு பணியில் இருந்த சுங்கச்சாவடி ஊழியர்கள் தொண்டைமான்நல்லூரைச் சேர்ந்த ராஜேந்திரன் மகன் முரளி (21), கீரனூர் பழனிசாமி மகன் பிரவீன் (22), திருப்பூர் கிராமத்தை சேர்ந்த பூமையா மகன் தமிழ்ச்செல்வன் (50) ஆகிய 3 பேரும் சேர்ந்து டிரைவர் ரமேஷ்குமாரை பலமாக தாக்கினர்.
இதில் பலத்த காயம் அடைந்த ரமேஷ்குமார் மாத்தூர் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். அதன் பேரில் மாத்தூர் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் செவ்வந்தி வழக்குப்பதிவு செய்து சுங்கச்சாவடி ஊழியர்கள் 3 பேரையும் கைது செய்து விசாரணை நடத்தி வருகிறார்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X