search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கோப்பு படம்.
    X
    கோப்பு படம்.

    தஞ்சையில் பெண்ணிடம் 6 பவுன் செயின் பறிப்பு

    தஞ்சையில் நடந்து சென்று கொண்டிருந்த பெண்ணிடம் 6 பவுன் சங்கிலியை மர்ம நபர்கள் பறித்து சென்றனர்.

    தஞ்சாவூர்:

    தஞ்சை தெற்கு வீதி முத்தோஜியப்பா சந்து பகுதியை சேர்ந்தவர் முருகேசன் மனைவி புஷ்பலதா (வயது 50). இவர் எல்லையம்மன் கோவில்தெரு பகுதியில் தையல் தொழில் செய்து வருகிறார். 

    இந்த நிலையில் புஷ்பலதா கடையில் இருந்து தன் வீட்டிற்கு நடந்து சென்று கொண்டிருந்தார். வீட்டின் அருகில் சென்றபோது, அந்த வழியாக மோட்டார் சைக்கிளில் வந்த மர்ம நபர்கள் புஷ்பலதா கழுத்தில் கிடந்த 6 பவுன் சங்கிலியை பறித்து சென்றனர். 

    இது குறித்து அவர் தஞ்சை மேற்கு போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். அதன்பேரில் போலீஸ் இன்ஸ்பெக்டர் சந்திரமோகன் மற்றும் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் சங்கிலியை பறித்து சென்ற மர்ம நபர்களை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.

    Next Story
    ×