என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
தஞ்சையில் பெண்ணிடம் 6 பவுன் செயின் பறிப்பு
Byமாலை மலர்4 April 2021 10:17 AM GMT (Updated: 4 April 2021 10:17 AM GMT)
தஞ்சையில் நடந்து சென்று கொண்டிருந்த பெண்ணிடம் 6 பவுன் சங்கிலியை மர்ம நபர்கள் பறித்து சென்றனர்.
தஞ்சாவூர்:
தஞ்சை தெற்கு வீதி முத்தோஜியப்பா சந்து பகுதியை சேர்ந்தவர் முருகேசன் மனைவி புஷ்பலதா (வயது 50). இவர் எல்லையம்மன் கோவில்தெரு பகுதியில் தையல் தொழில் செய்து வருகிறார்.
இந்த நிலையில் புஷ்பலதா கடையில் இருந்து தன் வீட்டிற்கு நடந்து சென்று கொண்டிருந்தார். வீட்டின் அருகில் சென்றபோது, அந்த வழியாக மோட்டார் சைக்கிளில் வந்த மர்ம நபர்கள் புஷ்பலதா கழுத்தில் கிடந்த 6 பவுன் சங்கிலியை பறித்து சென்றனர்.
இது குறித்து அவர் தஞ்சை மேற்கு போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். அதன்பேரில் போலீஸ் இன்ஸ்பெக்டர் சந்திரமோகன் மற்றும் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் சங்கிலியை பறித்து சென்ற மர்ம நபர்களை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X