search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    வழக்கு பதிவு
    X
    வழக்கு பதிவு

    தர்மபுரி, அரூர் பகுதியில் மதுபாட்டில்கள் பதுக்கி விற்ற 11 பேர் மீது வழக்கு

    தர்மபுரி, அரூர் பகுதிகளில் மதுவிலக்கு அமல் பிரிவு போலீசார் தீவிர சோதனை நடத்தினர். அப்போது வீடுகளில் மதுபாட்டில்களை பதுக்கி விற்ற 11 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
    தர்மபுரி:

    தர்மபுரி மாவட்டத்தில் மதுபாட்டில்களை கள்ளத்தனமாக பதுக்கி விற்பனை செய்தல், மதுபாட்டில்களை கடத்துதல் ஆகிய செயல்களை தடுக்க பறக்கும் படையினர் மற்றும் போலீசார் தீவிர வாகன சோதனை நடத்தி வருகிறார்கள். இதன் ஒரு பகுதியாக தர்மபுரி, அரூர் பகுதிகளில் மதுவிலக்கு அமல் பிரிவு போலீசார் தீவிர சோதனை நடத்தினர். அப்போது வீடுகளில் மதுபாட்டில்களை பதுக்கி விற்ற 11 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். மேலும் அவர்களிடமிருந்து 400 மதுபாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டன.
    Next Story
    ×