search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கைது
    X
    கைது

    கோவை அருகே மது விற்ற 13 பேர் கைது

    கோவை அருகே மது விற்ற 13 பேரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    கோவை:

    கோவை மாநகர போலீசார் மற்றும் மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு போலீசார், சாய்பாபா காலனி, போத்தனூர், பீளமேடு, ஒண்டிப்புதூர், கோவில் மேடு உள்பட பல்வேறு பகுதிகளில் சட்டவிரோதமாக மது பாட்டில்களை பதுக்கி வைத்து விற்பனை செய்வதாக ரகசியம் தகவல் கிடைத்தது.

    அதன்பேரில் போலீசார் அந்தப் பகுதிகளில் அதிரடி சோதனை நடத்தினர். அதில் சட்டவிரோதமாக மது பாட்டில்களை பதுக்கி வைத்து விற்பனை செய்ததாக 13 பேரை போலீசார் கைது செய்தனர்.

    அவர்களிடம் இருந்து 1000 மது பாட்டில்கள் மற்றும் பணம் 34 ஆயிரத்தை பறிமுதல் செய்தனர்.

    Next Story
    ×