search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    முகக்கவசம்
    X
    முகக்கவசம்

    மதுக்கூரில் முகக்கவசம் அணியாதவர்களுக்கு அபராதம்

    மதுக்கூர் பேரூராட்சிக்குட்பட்ட பகுதியில் முகக்கவசம் அணியாமல் வந்தவர்களுக்கு பேரூராட்சியின் சார்பாக ரூ.200 அபராதம் விதிக்கப்பட்டு வருகிறது.
    மதுக்கூர்:

    தஞ்சை மாவட்ட கலெக்டர் கோவிந்தராவ் உத்தரவுபடி, பேரூராட்சி உதவி இயக்குனர் அபுபக்கர் அறிவுரைப்படியும், மதுக்கூர் செயல் அலுவலர் ராமபிரசாத் முன்னிலையில், பட்டுக்கோட்டை தாலுக்கா, மதுக்கூர் பேரூராட்சிக்குட்பட்ட பகுதியில் முகக்கவசம் அணியாமல் வந்தவர்களுக்கு பேரூராட்சியின் சார்பாக ரூ.200 அபராதம் விதிக்கப்பட்டு வருகிறது.

    இதன்படி மதுக்கூர் பேரூராட்சி பகுதியில் பேரூராட்சி அலுவலர்கள் மற்றும் துப்புரவு மேற்பார்வையாளர்கள் என முகக்கவசம் அணியாமல் வந்தவர்களுக்கு அபராதம் விதித்து வருகின்றனர்.

    Next Story
    ×