என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
வாக்குப்பதிவு மையங்களில் பணிபுரியும் அலுவலர்களுக்கு பயிற்சி- கலெக்டர் பார்வையிட்டார்
Byமாலை மலர்22 March 2021 3:49 PM GMT (Updated: 22 March 2021 3:49 PM GMT)
குமரி மாவட்டத்தில் வாக்குப்பதிவு மையங்களில் பணிபுரியும் அலுவலர்களுக்கு பயிற்சி அளிக்கப்பட்டது.
நாகர்கோவில்:
குமரி மாவட்டத்தில் 6 சட்டசபை தொகுதிகளுக்கு பொதுத்தேர்தல் மற்றும் கன்னியாகுமரி நாடாளுமன்ற தொகுதி இடைத்தேர்தல் ஆகியவை வருகிற 6-ந் தேதி நடைபெற உள்ளது. தேர்தல் பணியில் அரசு பணியாளர்கள், ஆசிரியர்கள் மற்றும் போலீசார் என சுமார் 16 ஆயிரம் பேர் ஈடுபட உள்ளன. தேர்தல் பணியில் ஈடுபடும் போலீசாருக்கு ஏற்கனவே பல்வேறு அறிவுரைகள் வழங்கப்பட்டு வருகின்றன. மேலும் வாக்குப்பதிவு மையங்களில் பணிபுரியும் அலுவலர்களுக்கு தேர்தல் தொடர்பான பல்வேறு பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகிறது.
அதன் ஒரு பகுதியாக 6 சட்டசபை தொகுதிகள் மற்றும் நாடாளுமன்ற தொகுதியில் பணிபுரியும் அலுவலர்களுக்கு பயிற்சி வகுப்புகள் நேற்று நடந்தது.
கன்னியாகுமரி சட்டசபை தொகுதிக்கு மறவன்குடியிருப்பில் உள்ள செயின்ட் அல்போன்சா மெட்ரிக்குலேசன் பள்ளியிலும், நாகர்கோவில் சட்டசபை தொகுதிக்கு ராமன்புதூர் புனித ரெமிஜியூஸ் சி.பி.எஸ்.இ. பள்ளியிலும், குளச்சல் சட்டசபை தொகுதிக்கு சுங்கான்கடை புனித சேவியர்ஸ் என்ஜினீயரிங் கல்லூரியிலும், கிள்ளியூர் சட்டசபை தொகுதிக்கு கருங்கல் பெத்தலகேம் மெட்ரிக் பள்ளியிலும் நடைபெற்ற பயிற்சி முகாமை மாவட்ட தேர்தல் அதிகாரியும், கலெக்டருமான அரவிந்த் நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
மேலும் வாக்குப்பதிவு மையங்களில் சிறப்பாக பணியாற்ற வேண்டும் என்று அறிவுரையும் வழங்கினார்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X