search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    விபத்து
    X
    விபத்து

    கொடைரோடு அருகே நடுரோட்டில் கார் கவிழ்ந்து பூ வியாபாரி பலி

    கொடைரோடு அருகே இன்று காலை நடுரோட்டில் கார் கவிழ்ந்து பூ வியாபாரி பரிதாபமாக உயிரிழந்தார்.
    கொடைரோடு:

    சிவகங்கை மாவட்டம் மானாமதுரையை சேர்ந்தவர் பாண்டி(50). பூ வியாபாரம் செய்து வந்தார். இவரது உறவினர் திருப்பூரில் இறந்துவிட்டார். அதற்காக இன்று காலை ஒரு காரில் உறவினர்கள் ராஜம்மாள்(75), பாலகிருஷ்ணன்(45) ஆகியோருடன் ஒருகாரில் வந்து கொண்டிருந்தார்.

    காரை வன்னீஸ்வரன்(42) என்பவர் ஓட்டிவந்தார். மதுரை-திண்டுக்கல் 4 வழிச்சாலையில் கொடைரோடு அருகே நக்கம்பட்டி பகுதியில் கார்வந்தபோது திடீரென டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து சாலையோரம் தலைகுப்புறகவிழ்ந்தது. இதில் சம்பவ இடத்திலேயே பாண்டி பரிதாபமாக உயிரிழந்தார். மற்ற 3 பேரும் படுகாயங்களுடன் திண்டுக்கல் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டனர்.

    பலியான பாண்டியின் உடல் நிலக்கோட்டை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டது. விபத்து குறித்து அம்மையநாயக்கனூர் இன்ஸ்பெக்டர் சண்முகலட்சுமி வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.
    Next Story
    ×