search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கைது
    X
    கைது

    திருச்சியில் பெண்ணுக்கு பாலியல் தொந்தரவு அளித்த வாலிபர் கைது

    திருச்சியில் இறைதூதர் என்று கூறி பெண்ணுக்கு பாலியல் தொந்தரவு அளித்த வாலிபரை போலீசார் கைது செய்தனர்.
    திருச்சி:

    திருச்சி கே.கே.நகர் பகுதியை சேர்ந்தவர் பானு (வயது 30, பெயர் மாற்றப்பட்டுள்ளது) இவர் கன்டோன்ட்மென்ட் போலீசில் ஒரு புகார் மனு கொடுத்தார். அதில் அவர் கூறியிருந்ததாவது:-

    திருச்சி நத்தர்ஷா பள்ளி வாசல் தெருவை சேர்ந்த பாரூக் என்பவர் கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்பு எனக்கு அறிமுகமானார்.

    அவர் தன்னை ஒரு மத போதகர் என்று அறிமுகம் செய்து கொண்டார். ஆனால் பாரூக், சில வாரங்களில் மத ரீதியான வகுப்பு எடுக்க வேண்டும் என்று தெரிவித்தார்.

    தன்னை இறைதூதர் என்று கூறிய பாரூக், தான் எது சொன்னாலும் அப்படியே கீழ்ப்படிய வேண்டும் என்று கூறினார். பின்பு மத வகுப்பு எடுப்பதாக என்னை பாலியல் ரீதியாக கொடுமைபடுத்தினார்.

    அது மட்டுமின்றி மிரட்டி ரூ.50 லட்சம் மதிப்புள்ள 80 பவுன் நகைகள் மற்றும் ரூ.10 லட்சம் ரொக்கத்தை என்னிடமிருந்து பெற்றுக்கொண்ட பரூக் என்னை பல முறை கொடுமைப்படுத்தும் செயல்களில் ஈடுபட்டார். இதற்கு உடந்தையாக அவரது மனைவி மற்றும் உறவினர் இருந்தனர் என்று புகாரில் தெரிவித்திருந்தார்.

    இது குறித்து போலீசார் விசாரணை நடத்தி, இறை தூதர் என்ற பெயரில் மோசடியில் ஈடுபட்ட பாரூக்கை கைது செய்தனர். இந்த மோசடிக்கு உடைந்தையாக இருந்த அவரது மனைவி மற்றும் உறவினரை போலீசார் தேடி வருகின்றனர்.
    Next Story
    ×