search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கொலை
    X
    கொலை

    சங்கரன்கோவில் அருகே மோதலை விலக்கி விட்ட முதியவர் கொலை?

    சங்கரன்கோவில் அருகே மோதலை விலக்கி விட்ட முதியவர் கொலை செய்யப்பட்ட சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    சங்கரன்கோவில்:

    சங்கரன்கோவில் அருகே உள்ள சின்னகோவிலான் குளம், பெரியசாமிபுரத்தை சேர்ந்தவர் சூசையப்பன் (வயது74).

    இவரது மகனுக்கும் அதே பகுதியை சேர்ந்த அவரது உறவினர் ஒருவருக்கு இடையே சொத்து தகராறு இருந்து வந்ததாக கூறப்படுகிறது.

    இது தொடர்பாக நேற்று அவர்களுக்கிடையே தகராறு ஏற்பட்டு கைகலப்பாக மாறி உள்ளது. இதை பார்த்த சூசையப்பன் மோதலை விலக்கி விட்டுள்ளார்.

    அப்போது எதிர் தரப்பினர் சூசையப்பனை கீழே தள்ளி உள்ளனர். இதில் காயம் அடைந்த அவரை குடும்பத்தினர் மீட்டு நெல்லை அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர்.அங்கு தீவிர சிகிச்சை அளித்தும் பலனின்றி நள்ளிரவில் சூசையப்பன் இறந்தார்.

    இதுகுறித்து தகவல் அறிந்ததும் சின்ன கோவிலான்குளம் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினர்.

    சூசையப்பன் ஏற்கனவே உடல் நலக்குறைவால் கடந்த சில நாட்களாக ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வந்துள்ளார். நேற்று தான் அவர் வீடு திரும்பிய நிலையில் மோதலை விலக்கி விட்ட போது கீழே விழுந்தது போலீஸ் விசாரணையில் தெரியவந்தது.

    தற்போது உடல் பிரேத பரிசோதனைக்காக அரசு ஆஸ்பத்திரியில் வைக்கப்பட்டு உள்ளது. பரிசோதனை முடிவில் தான் மோதலில் ஏற்பட்ட காயத்தால் அவர் இறந்தாரா? என்பது தெரியவரும் என போலீசார் கூறினர்.

    முதற்கட்டமாக மர்மச் சாவு என வழக்கு பதிவு செய்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    Next Story
    ×