என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் 13, 14-ந் தேதிகளில் புதிய வாக்காளர்களுக்கு அடையாள அட்டை- கலெக்டர் தகவல்
Byமாலை மலர்8 March 2021 2:59 PM GMT (Updated: 8 March 2021 2:59 PM GMT)
கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் வருகிற 13 மற்றும் 14-ந் தேதிகளில் புதிய வாக்காளர்களக்கு வண்ண அடையாள அட்டை வழங்கப்பட இருப்பதாக மாவட்ட தேர்தல் அலுவலரும், கலெக்டருமான கிரண்குராலா தெரிவித்துள்ளார்.
கள்ளக்குறிச்சி:
கலெக்டர் கிரண்குராலா வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
இந்திய தேர்தல் ஆணையத்தின் அறிவுரைப்படி வாக்காளர்கள் சிறப்பு சுருக்க திருத்தம்-2021 சிறப்பு முகாமில் புதியதாக இணைந்த வாக்காளர்கள் அனைவரையும் வாக்களிக்க செய்ய வேண்டும் என்ற நோக்கத்தில் புதியதாக வாக்காளராக பதிவுசெய்யப்பட்ட அனைவருக்கும் மின்னணு வண்ண வாக்காளர் அடையாள அட்டை NVSP/ VHA கொண்ட இணையதளம் மூலம் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் என அறிவித்தது. ஆனால் இதில் போதுமான முன்னேற்றம் இல்லை.
எனவே வருகிற சட்டமன்ற தேர்தலில் புதிய வாக்காளர்களை 100 சதவீதம் வாக்களிக்க செய்யும் வகையில், அவர்களுக்கு மின்னணு வண்ண வாக்காளர் அடையாள அட்டையை வழங்க சம்மந்தப்பட்ட வாக்குச்சாவடி மையத்தில் வருகிற 13-ந் தேதி(சனிக்கிழமை) மற்றும் 14-ந் தேதி(ஞாயிற்றுக்கிழமை) ஆகிய 2 நாட்கள் சிறப்பு முகாம் நடத்திட உத்தரவிட்டுள்ளது. எனவே புதிய வாக்காளர்கள் முகாம் நாட்களில் வாக்குச்சாவடி மையங்களுக்கு சென்று மின்னணு வண்ண வாக்காளர் அடையாள அட்டை பெற்று பயன்பெறுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். இவ்வாறு அந்த செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.
கலெக்டர் கிரண்குராலா வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
இந்திய தேர்தல் ஆணையத்தின் அறிவுரைப்படி வாக்காளர்கள் சிறப்பு சுருக்க திருத்தம்-2021 சிறப்பு முகாமில் புதியதாக இணைந்த வாக்காளர்கள் அனைவரையும் வாக்களிக்க செய்ய வேண்டும் என்ற நோக்கத்தில் புதியதாக வாக்காளராக பதிவுசெய்யப்பட்ட அனைவருக்கும் மின்னணு வண்ண வாக்காளர் அடையாள அட்டை NVSP/ VHA கொண்ட இணையதளம் மூலம் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் என அறிவித்தது. ஆனால் இதில் போதுமான முன்னேற்றம் இல்லை.
எனவே வருகிற சட்டமன்ற தேர்தலில் புதிய வாக்காளர்களை 100 சதவீதம் வாக்களிக்க செய்யும் வகையில், அவர்களுக்கு மின்னணு வண்ண வாக்காளர் அடையாள அட்டையை வழங்க சம்மந்தப்பட்ட வாக்குச்சாவடி மையத்தில் வருகிற 13-ந் தேதி(சனிக்கிழமை) மற்றும் 14-ந் தேதி(ஞாயிற்றுக்கிழமை) ஆகிய 2 நாட்கள் சிறப்பு முகாம் நடத்திட உத்தரவிட்டுள்ளது. எனவே புதிய வாக்காளர்கள் முகாம் நாட்களில் வாக்குச்சாவடி மையங்களுக்கு சென்று மின்னணு வண்ண வாக்காளர் அடையாள அட்டை பெற்று பயன்பெறுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். இவ்வாறு அந்த செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X