search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கைது செய்யப்பட்ட 4 பேரை படத்தில் காணலாம்.
    X
    கைது செய்யப்பட்ட 4 பேரை படத்தில் காணலாம்.

    எலக்ட்ரிக் கடை உரிமையாளர் கொலை: ஆட்டோ டிரைவர் உள்பட 4 பேர் கைது

    மது தகராறில் எலக்ட்ரிக் கடை உரிமையாளரை கொலை செய்த ஆட்டோ டிரைவர் உள்பட 4 பேரை போலீசார் சுற்றி வளைத்து பிடித்து கைது செய்தனர்.
    மதுரை:

    மதுரை மகபூப்பாளையம் பகுதியை சேர்ந்தவர் பாட்சா (வயது45). இவர் மகபூப்பாளையம் பகுதியில் எலக்ட்ரிக்கடை வைத்திருந்தார். சம்பவத்தன்று இரவு கடையில் இருந்தபோது அவருக்கு செல்போன் அழைப்பு வந்தது. அதில் பேசியவர்கள் மது அருந்த ஜின்னா திடல் அருகில் உள்ள ஆட்டோ நிலையத்திற்கு வருமாறு கூறியுள்ளனர்.

    அவரும் கடையை அடைத்து விட்டு அங்கு சென்றுள்ளார். அங்கு சிலருடன் சேர்ந்து அவர் மது அருந்தி உள்ளார். அப்போது அவர்களுக்குள் ஏற்பட்ட தகராறில் பாட்சா உடன் இருந்தவர்கள் அவரை சரமாரியாக குத்தி கொலை செய்து விட்டு தப்பி விட்டதாக கூறப்படுகிறது.

    தகவலின் பேரில் எஸ்.எஸ்.காலனி போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து கொலை செய்யப்பட்டவரின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு பெரிய ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

    இது குறித்து எஸ்.எஸ்.காலனி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். அதில் மகபூப் பாளையத்தை சேர்ந்த ஆட்டோ டிரைவர் பரகத், அல்ஹாஜ், அப்பாஸ், ராஜா மைதீன் ஆகியோர் பாட்சாவை கொலை செய்தது தெரியவந்தது. அதை தொடர்ந்துபோலீசார் அவர்களை தேடி வந்தனர். இந்த நிலையில் அந்த பகுதியில் பதுங்கியிருந்த 4 பேரையும் நேற்று போலீசார் சுற்றி வளைத்து பிடித்து கைது செய்தனர்.
    Next Story
    ×