என் மலர்![tooltip icon](/images/info-tooltip.svg)
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
![வழக்கு வழக்கு](https://img.maalaimalar.com/Articles/2021/Mar/202103061803375767_Tamil_News_tamil-news-nurse-harassment-doctor-on-case-filed-near_SECVPF.gif)
X
வழக்கு
மங்கலம் அருகே நர்சுக்கு பாலியல் தொந்தரவு- டாக்டர் மீது வழக்கு
By
மாலை மலர்5 March 2021 6:06 PM GMT (Updated: 6 March 2021 12:33 PM GMT)
![மாலை மலர் மாலை மலர்](/images/authorplaceholder.jpg?type=1&v=2)
பணியில் இருந்த நர்சுக்கு டாக்டர் பாலியல் தொந்தரவு கொடுத்த சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
மங்கலம்:
மங்கலம் அருகே நர்சுக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த டாக்டர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். இது குறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது:-
திருப்பூர் மாவட்டம் மங்கலம் நால்ரோடு பகுதியில் ஷிபானா என்ற பெயரில் கிளினிக் நடத்தி வருபவர் டாக்டர் ஹர்சத் (வயது 55). இந்த கிளினிக்கில் மங்கலம் மற்றும் அதன் சுற்று வட்டார பகுதிகளை சேர்ந்தவர்கள் சளி, காய்ச்சல் மற்றும் இதர நோய்களுக்கு வெளி நோயாளிகளாக வந்து சிகிச்சை பெற்று செல்கின்றனர்.
இந்த கிளினிக்கில் கடந்த 3 மாதங்களாக 30 வயதுள்ள பெண் ஒருவர் நர்சாக பணியாற்றி வருகிறார். இவருடைய சொந்த ஊர் திண்டுக்கல் மாவட்டம் பழனியாகும். இவர் தனது குடும்பத்துடன் மங்கலம் பகுதியில் தங்கி இருந்து கிளினிக் வேலைக்கு சென்று வந்தார்.
இந்த நிலையில் கடந்த 1-ந் தேதி கிளினிக்கில் பணியில் நர்சு இருந்தார். அப்போது வெளிநோயாளிகள் யாரும் இ்ல்லை. அந்த சந்தர்ப்பத்தில் டாக்டர் ஹர்சத், அந்த நர்சுக்கு பாலியல் தொந்தரவு கொடுத்ததாக கூறப்படுகிறது.
பின்னர் கிளினிக்கில் இருந்து அந்த நர்சு மனவேதனையுடன் வீட்டிற்கு வந்துள்ளார். பின்னர் இது குறித்து மங்கலம் போலீசில் டாக்டர் மீது நர்சு புகார் செய்துள்ளார்.
புகாரின் பேரில் போலீசார் டாக்டர் ஹர்சத் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
இந்த சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X
![sidkick sidekick](/images/sidekick-open.png)