search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    வழக்கு
    X
    வழக்கு

    மங்கலம் அருகே நர்சுக்கு பாலியல் தொந்தரவு- டாக்டர் மீது வழக்கு

    பணியில் இருந்த நர்சுக்கு டாக்டர் பாலியல் தொந்தரவு கொடுத்த சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
    மங்கலம்:

    மங்கலம் அருகே நர்சுக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த டாக்டர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். இது குறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது:-

    திருப்பூர் மாவட்டம் மங்கலம் நால்ரோடு பகுதியில் ஷிபானா என்ற பெயரில் கிளினிக் நடத்தி வருபவர் டாக்டர் ஹர்சத் (வயது 55). இந்த கிளினிக்கில் மங்கலம் மற்றும் அதன் சுற்று வட்டார பகுதிகளை சேர்ந்தவர்கள் சளி, காய்ச்சல் மற்றும் இதர நோய்களுக்கு வெளி நோயாளிகளாக வந்து சிகிச்சை பெற்று செல்கின்றனர்.

    இந்த கிளினிக்கில் கடந்த 3 மாதங்களாக 30 வயதுள்ள பெண் ஒருவர் நர்சாக பணியாற்றி வருகிறார். இவருடைய சொந்த ஊர் திண்டுக்கல் மாவட்டம் பழனியாகும். இவர் தனது குடும்பத்துடன் மங்கலம் பகுதியில் தங்கி இருந்து கிளினிக் வேலைக்கு சென்று வந்தார்.

    இந்த நிலையில் கடந்த 1-ந் தேதி கிளினிக்கில் பணியில் நர்சு இருந்தார். அப்போது வெளிநோயாளிகள் யாரும் இ்ல்லை. அந்த சந்தர்ப்பத்தில் டாக்டர் ஹர்சத், அந்த நர்சுக்கு பாலியல் தொந்தரவு கொடுத்ததாக கூறப்படுகிறது.

    பின்னர் கிளினிக்கில் இருந்து அந்த நர்சு மனவேதனையுடன் வீட்டிற்கு வந்துள்ளார். பின்னர் இது குறித்து மங்கலம் போலீசில் டாக்டர் மீது நர்சு புகார் செய்துள்ளார்.

    புகாரின் பேரில் போலீசார் டாக்டர் ஹர்சத் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    இந்த சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
    Next Story
    ×