search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    உயிரிழப்பு
    X
    உயிரிழப்பு

    பாளையங்கோட்டை அருகே விளையாட்டாக விஷம் குடித்த சிறுவன் உயிரிழப்பு

    பாளையங்கோட்டை அருகே விஷம் குடித்த சிறுவன் உயிரிழந்த சம்பவம் தொடர்பாக சிவந்திபட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
    நெல்லை:

    பாளையங்கோட்டை அருகே உள்ள சிவந்திபட்டியை அடுத்த முத்தூர் காமராஜர் நகரை சேர்ந்தவர் முத்தையா. இவருடைய மகன் சதீஷ் (வயது 12). இவன் பாளையங்கோட்டையில் உள்ள ஒரு பள்ளிக்கூடத்தில் 6-ம் வகுப்பு படித்து வந்தான்.

    தற்போது கொரோனா ஊரடங்கால் பள்ளிக்கூடங்களில் 6-ம் வகுப்பு திறக்கப்படவில்லை. இதையொட்டி சதீஷ், அந்த பகுதியை சேர்ந்த சிறுவர், சிறுமிகளுடன் விளையாடிக் கொண்டிருந்தான். கடந்த 2 நாட்களுக்கு முன்பு சதீஷின் பெற்றோர் வயல் வேலைக்கு சென்று விட்டனர்.

    அப்போது சதீஷ் வீட்டில் விளையாடிக் கொண்டிருந்தபோது, அங்கிருந்த விஷத்தை எடுத்து விளையாட்டாக குடித்து உள்ளான். இதைக்கண்ட சிறுவர், சிறுமிகள் பெரியவர்களிடம் கூறினர். அவர்கள் உடனடியாக சதீஷை மீட்டு பாளையங்கோட்டை ஐகிரவுண்டு அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். ஆனால் தீவிர சிகிச்சை அளித்தும் பலன் அளிக்காமல் நேற்று முன்தினம் சதீஷ் பரிதாபமாக இறந்தான்.

    இதுகுறித்து சிவந்திபட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இச்சம்பவம் அந்த பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
    Next Story
    ×