search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கைது
    X
    கைது

    கள்ளக்குறிச்சியில் மோட்டார் சைக்கிள் திருடிய வாலிபர் கைது

    கள்ளக்குறிச்சியில் மோட்டார் சைக்கிள் திருடிய வாலிபரை போலீசார் கைது செய்து அவரிடம் இருந்து வண்டியை பறிமுதல் செய்தனர்.
    கள்ளக்குறிச்சி:

    கள்ளக்குறிச்சி சித்தேரி தெருவைச் சேர்ந்த முருகேசன் (வயது 55). கட்டிட தொழிலாளியான இவர் தனது மோட்டார் சைக்கிளை வள்ளலார் தெருவில் நிறுத்தி விட்டு அருகில் வேலை செய்து கொண்டிருந்தார்.

    மதியம் திரும்பி வந்து பார்த்தபோது மோட்டார் சைக்கிளை காணவில்லை. இதுபற்றி முருகேசன் கொடுத்த புகாரின் பேரில் கள்ளக்குறிச்சி போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் மணிகண்டன் வழக்கு பதிவுசெய்து விசாரணை நடத்தினர். 

    இந்த நிலையில் திருட்டு சம்பவம் நடந்த இடத்தில் இருந்த கண்காணிப்பு கேமராவை போலீசார் ஆய்வு செய்தபோது மோட்டார் சைக்கிளை திருடியவர் விளம்பார் கிராமத்தைச் சேர்ந்த குப்புசாமி மகன் குமார்(32) என்பது தெரியவந்தது. அவரை கைது செய்த போலீசார் மோட்டார் சைக்கிளை பறிமுதல் செய்தனர்.
    Next Story
    ×