என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
மோட்டார்சைக்கிள் மீது லாரி மோதி விபத்து - அரசு போக்குவரத்து கழக அதிகாரி பலி
Byமாலை மலர்27 Feb 2021 9:26 PM GMT (Updated: 27 Feb 2021 9:26 PM GMT)
பல்லடத்தில் மோட்டார்சைக்கிள் மீது லாரி மோதிய விபத்தில் அரசு போக்குவரத்து கழக அதிகாரி பலியானார்.
பல்லடம்:
கோவை, நீலிகோணம்பாளையம் நேதாஜி புரத்தைச் சேர்ந்தவர் பிரகாசம் (வயது 56). இவர் திருப்பூர் அரசு போக்குவரத்து கழக பணிமனையில் முதுநிலை தணிக்கையாளராக வேலை பார்த்து வந்தார்.
இந்த நிலையில் நேற்று வேலை முடிந்து, வீட்டுக்கு செல்வதற்காக தனது மோட்டார்சைக்கிளில் திருப்பூரிலிருந்து நீலிகோணம்பாளையம் நோக்கி சென்று கொண்டிருந்தார். பல்லடத்தை அடுத்த பெரும்பாளி என்ற இடத்தில் பிரகாசம் சென்று கொண்டிருந்தார். அப்போது எதிரே கோவையிலிருந்து பல்லடம் நோக்கி டேங்கர் லாரி ஒன்று வந்தது.
கண் இமைக்கும் நேரத்தில் பிரகாசம் ஓட்டி வந்த மோட்டார் சைக்கிள் மீது டேங்கர் லாரி மோதியது. இந்த விபத்தில் பலத்த காயமடைந்த பிரகாசத்தை அக்கம் பக்கம் உள்ளவர்கள் மீட்டு பல்லடம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். ஆனால் ஆஸ்பத்திரிக்கு செல்லும் வழியிலேயே பிரகாசம் பரிதாபமாக உயிரிழந்தார்.
இது குறித்து பல்லடம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
கோவை, நீலிகோணம்பாளையம் நேதாஜி புரத்தைச் சேர்ந்தவர் பிரகாசம் (வயது 56). இவர் திருப்பூர் அரசு போக்குவரத்து கழக பணிமனையில் முதுநிலை தணிக்கையாளராக வேலை பார்த்து வந்தார்.
இந்த நிலையில் நேற்று வேலை முடிந்து, வீட்டுக்கு செல்வதற்காக தனது மோட்டார்சைக்கிளில் திருப்பூரிலிருந்து நீலிகோணம்பாளையம் நோக்கி சென்று கொண்டிருந்தார். பல்லடத்தை அடுத்த பெரும்பாளி என்ற இடத்தில் பிரகாசம் சென்று கொண்டிருந்தார். அப்போது எதிரே கோவையிலிருந்து பல்லடம் நோக்கி டேங்கர் லாரி ஒன்று வந்தது.
கண் இமைக்கும் நேரத்தில் பிரகாசம் ஓட்டி வந்த மோட்டார் சைக்கிள் மீது டேங்கர் லாரி மோதியது. இந்த விபத்தில் பலத்த காயமடைந்த பிரகாசத்தை அக்கம் பக்கம் உள்ளவர்கள் மீட்டு பல்லடம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். ஆனால் ஆஸ்பத்திரிக்கு செல்லும் வழியிலேயே பிரகாசம் பரிதாபமாக உயிரிழந்தார்.
இது குறித்து பல்லடம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X