search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கைது
    X
    கைது

    திருத்துறைப்பூண்டியில் ஓட்டலை சேதப்படுத்திய 2 வாலிபர்கள் கைது

    திருத்துறைப்பூண்டியில் ஓட்டலை சேதப்படுத்திய 2 பேரை போலீசார் கைது செய்து உள்ளனர்.
    திருத்துறைப்பூண்டி:

    திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டி நாகை கிழக்கு கடற்கரை சாலையில் ஓட்டல் நடத்தி வருபவர் ஜெயராஜ்(வயது40). நேற்று இரவு இவரது ஓட்டலில் சாப்பிட வந்த 2 பேர் தகராறில் ஈடுபட்டு ஓட்டலில் உள்ள பொருட்களை அடித்து உடைத்ததாக கூறப்படுகிறது.

    இது குறித்து ஜெயராஜ் திருத்துறைப்பூண்டி போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். இதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து மீனாட்சி வாய்க்கால் கீழே தெருவை சேர்ந்த வீரமணி மகன் விக்னேஷ்வரன்(25), அதே தெருவை சேர்ந்த நல்லதம்பி மகன் ஆகாஷ்(22) ஆகிய இருவரையும் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
    Next Story
    ×