என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
கோவையில் கோவிலின் பூட்டை உடைத்து ஐம்பொன் அம்மன் சிலை, நகை கொள்ளை
Byமாலை மலர்25 Feb 2021 10:51 AM GMT (Updated: 25 Feb 2021 10:54 AM GMT)
கோவையில் நள்ளிரவில் மாரியம்மன் கோவிலின் பூட்டை உடைத்து பீரோவில் இருந்த ஐம்பொன் சிலை, மற்றும் நகையை மர்ம நபர் கொள்ளயைடித்து சென்றார்.
கோவை:
கோவை சித்தாபுதூர் ஜவஹர் நகரில் கருவலூர் மாரியம்மன் கோவில் உள்ளது. நேற்று இரவு பூசாரி வழக்கம் போல கோவிலை பூட்டி விட்டு வீட்டிற்கு சென்றார்.
நள்ளிரவு கோவிலின் கேட்டை ஏறி குதித்து உள்ளே நுழைந்த மர்மநபர் ஒருவர் கோவிலின் பூட்டை உடைத்து உள்ளே சென்றார். அங்கு இருந்த பீரோவை திறந்து அதில் இருந்த 1 அடி உயரமுள்ள ஜம்பொன் அம்மன் சிலை, ¼ பவுன் தங்க நகைகள் மற்றும் 2 பட்டு சேலை ஆகியவற்றை கொள்ளையடித்து தப்பிச் சென்றார்.
இன்று காலை கோவிலை திறக்க சென்ற பூசாரி கோவின் பூட்டு உடைக்கப்பட்டு திறந்து இருப்பதை பார்த்தார். பின்னர் உள்ளே சென்று பார்த்த போது பீரோவில் இருந்த அம்மன் சிலை, நகை, சேலை ஆகியவை கொள்ளையடிக்கப்பட்டு இருப்பது கண்டு அதிர்ச்சியடைந்தார்.
இது குறித்து அவர் காட்டூர் போலீசாருக்கு தகவல் தெரிவித்தார். உடனடியாக போலீசார் கோவிலுக்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினர். கோவிலில் பொருத்தப்பட்டு இருந்த கண்காணிப்பு கேமிரா காட்சிகளை ஆய்வு செய்த போது மர்மநபர் ஒருவர் வந்து செல்லும் காட்சிகள் பதிவாகி இருந்தது.
இதனை வைத்து போலீசார் கோவிலின் பூட்டை உடைத்து அம்மன் சிலை, நகை மற்றும் சேலைகளை கொள்ளையடித்து சென்ற மர்மநபரை தேடி வருகிறார்கள்.
கோவை சித்தாபுதூர் ஜவஹர் நகரில் கருவலூர் மாரியம்மன் கோவில் உள்ளது. நேற்று இரவு பூசாரி வழக்கம் போல கோவிலை பூட்டி விட்டு வீட்டிற்கு சென்றார்.
நள்ளிரவு கோவிலின் கேட்டை ஏறி குதித்து உள்ளே நுழைந்த மர்மநபர் ஒருவர் கோவிலின் பூட்டை உடைத்து உள்ளே சென்றார். அங்கு இருந்த பீரோவை திறந்து அதில் இருந்த 1 அடி உயரமுள்ள ஜம்பொன் அம்மன் சிலை, ¼ பவுன் தங்க நகைகள் மற்றும் 2 பட்டு சேலை ஆகியவற்றை கொள்ளையடித்து தப்பிச் சென்றார்.
இன்று காலை கோவிலை திறக்க சென்ற பூசாரி கோவின் பூட்டு உடைக்கப்பட்டு திறந்து இருப்பதை பார்த்தார். பின்னர் உள்ளே சென்று பார்த்த போது பீரோவில் இருந்த அம்மன் சிலை, நகை, சேலை ஆகியவை கொள்ளையடிக்கப்பட்டு இருப்பது கண்டு அதிர்ச்சியடைந்தார்.
இது குறித்து அவர் காட்டூர் போலீசாருக்கு தகவல் தெரிவித்தார். உடனடியாக போலீசார் கோவிலுக்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினர். கோவிலில் பொருத்தப்பட்டு இருந்த கண்காணிப்பு கேமிரா காட்சிகளை ஆய்வு செய்த போது மர்மநபர் ஒருவர் வந்து செல்லும் காட்சிகள் பதிவாகி இருந்தது.
இதனை வைத்து போலீசார் கோவிலின் பூட்டை உடைத்து அம்மன் சிலை, நகை மற்றும் சேலைகளை கொள்ளையடித்து சென்ற மர்மநபரை தேடி வருகிறார்கள்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X