search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கொலை
    X
    கொலை

    சாயல்குடி அருகே விவசாயி வெட்டிக்கொலை

    சாயல்குடி அருகே விவசாயி வெட்டிக்கொலை செய்யப்பட்டார். அவரை கொன்ற கும்பலை போலீசார் தேடி வருகிறார்கள்.

    சாயல்குடி:

    ராமநாதபுரம் மாவட்டம் சாயல்குடி அருகே உள்ள சிக்கலை அடுத்த மட்டிய நேந்தல் கிராமத்தைச் சேர்ந்தவர் ரத்தினவேல் (வயது 60) விவசாயி.

    இவர் நேற்று மாலை வீட்டில் இருந்து வெளியே சென்றார்.அதன் பிறகு வீடு திரும்பவில்லை.

    இந்தநிலையில் உத்தரகோசமங்கையில் இருந்து முதுகுளத்தூர் செல்லும் சாலையில் உள்ள பூசேரி விலக்குப் பகுதியில் ரத்த காயங்களுடன் ரத்னவேல் பிணமாக கிடந்துள்ளார்.

    இன்று காலை அந்த வழியாக சென்றவர்கள் இதனைப் பார்த்து அதிர்ச்சி அடைந்தனர். இதுகுறித்து சிக்கல் போலீசாருக்கு தகவல் கொடுக்கப்பட்டது.

    போலீசார் விரைந்து வந்து விசாரணை நடத்தினர். இதில் தான் பிணமாக கிடந்தவர் ரத்னவேல் என தெரியவந்தது. உடலைக் கைப்பற்றிய போலீசார் பிரேத பரிசோதனைக்காக அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். ரத்னவேல் எதற்காக கொலை செய்யப்பட்டார்? கொலையாளிகள் யார்? என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    Next Story
    ×