search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கோப்புப்படம்
    X
    கோப்புப்படம்

    மதுரை தெப்பக்குளம் அருகே மின்னனு சாதனக்கடையில் பயங்கர தீ விபத்து

    மதுரை பெருமாள் தெப்பக்குளம் அருகே உள்ள மின்னனு சாதனக்கடையில் தீடீரென பயங்கர தீ விபத்து நிகழ்ந்துள்ளது.
    மதுரை:

    மதுரை  பெருமாள் தெப்பக்குளம் அருகே மின்னனு சாதனக்கடையில் தீ விபத்து ஏற்பட்டது. தீ, மளமளவென மற்ற இடங்களுக்கும் பரவியது. இதனால் அப்பகுதி முழுவதும் கடுமையான புகை மூட்டம் சூழ்ந்தது. இதுபற்றி தகவல் அறிந்தவுடன் 5 தீயணைப்பு வாகனங்களில் வந்த 30க்கும் மேற்பட்ட வீரர்கள்  சம்பவ இடத்திற்கு சென்று தீயை கட்டுப்படுத்தும் பணியில் முழுவீச்சில் ஈடுபட்டுள்ளனர்.

    மின்னனு சாதனக்கடையில் பற்றிய தீ கடைக்கு அருகில் இருந்த 12க்கும் மேற்பட்ட கடைகளிலும் பற்றி எறிவதால் அந்த இடம் முழுவதும்  புகை மூட்டம் சூழ்ந்து காணப்படுகிறது.   தொடர்ந்து தீயணைப்பு வீரர்கள் தீயை கட்டுப்படுத்தும் முயற்சியில் ஈடுபட்டு வருகின்றனர்.
    Next Story
    ×