என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
கோட்டூர் அருகே வீடு புகுந்து கணவன்-மனைவி மீது தாக்குதல்: வாலிபர் கைது
Byமாலை மலர்21 Feb 2021 11:36 AM GMT (Updated: 21 Feb 2021 11:36 AM GMT)
கோட்டூர் அருகே வீடு புகுந்து கணவன்- மனைவியை தாக்கியவர் கைது செய்யப்பட்டார். மேலும் 3 பேரை போலீசார் தேடி வருகிறார்கள்.
கோட்டூர்:
திருவாரூர் மாவட்டம் கோட்டூர் அருகே உள்ள மேலபுழுதிகுடி கிராமத்தைச் சேர்ந்தவர் சேகர்(வயது45). அதே பகுதியை சேர்ந்தவர் முத்தரசன்(22). நேற்று சேகருக்கும் முத்தரசனுக்கும் இடையே தகராறு ஏற்பட்டது. இதனால் முத்தரசன் மற்றும் அவருடைய உறவினர்கள் 3 பேர் சேர்ந்து வீடு புகுந்து சேகரை தாக்கினர். அப்போது இதை தடுக்க முயன்ற சேகரின் மனைவி விஜயாவும் தாக்கப்பட்டார்.
தாக்குதலில் படுகாயமடைந்த கணவன்-மனைவி இருவரும் திருத்துறைப்பூண்டி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர். இது குறித்து விக்கிரபாண்டியம் போலீஸ் நிலையத்தில் சேகர் கொடுத்த புகாரின் பேரில் முத்தரசன் மற்றும் அவருடைய உறவினர்கள் 3 பேர் மீதும் சப்-இன்ஸ்பெக்டர் சங்கர் வழக்குப்பதிவு செய்து முத்தரசனை (22) கைது செய்து விசாரணை செய்து வருகிறார். மேலும் 3 பேரை போலீசார் தேடி வருகிறார்கள்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X