என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
திருக்கோவிலூர் அருகே விஷம் குடித்து தொழிலாளி தற்கொலை
Byமாலை மலர்15 Feb 2021 3:30 PM GMT (Updated: 15 Feb 2021 3:30 PM GMT)
திருக்கோவிலூர் அருகே மனநலம் பாதிக்கப்பட்டு இருந்த தொழிலாளி விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார்.
திருக்கோவிலூர்:
திருக்கோவிலூரை அடுத்த கனகநந்தல் கிராமத்தை சேர்ந்தவர் பழனிவேல் (வயது 50) தொழிலாளி. மதுகுடிக்கும் பழக்கம் உடைய இவர் சற்று மனநலம் பாதிக்கப்பட்டு இருந்ததாக கூறப்படுகிறது.
சம்பவத்தன்று அதே ஊரில் வயல் வேலைக்கு சென்றுவிட்டு மாலையில் வீடு திரும்பிய பழனிவேலுவின் வாயில் இருந்து விஷ மருந்து நாற்றம் அடித்தது. பின்னர் அவர் விஷம் குடித்தது தெரியவந்தது. இதையடுத்து பழனிவேலுவை சிகிச்சைக்காக முண்டியம்பாக்கம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவருக்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்தும் பலனின்றி பரிதாபமாக இறந்தார்.
இது குறித்து திருக்கோவிலூர் போலீசார் வழக்குபதிவுசெய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X