search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கோப்புப்படம்
    X
    கோப்புப்படம்

    குடும்பத்தகராறில் பெண் தூக்குப்போட்டு தற்கொலை

    கணவன்-மனைவி இடையே ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக மனைவி சேலையில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
    ஊத்துக்குளி:

    அசாம் மாநிலம் சந்திராபூர் பகுதியைச் சேர்ந்தவர் அஜய் பதூர் (வயது 36). இவர் தனது மனைவி கோனிகா தேவியுடன் (32) ஊத்துக்குளி அருகே உள்ள செங்கப்பள்ளி பாலாஜி நகரில் வாடகை வீட்டில் குடியிருந்து வந்தார். இவர்கள் இருவரும் தனியார் நிறுவனத்தில் கூலித் தொழில் செய்துவந்தனர். இந்தநிலையில் கணவன்-மனைவி இடையே ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக வீட்டில் தனிமையில் இருந்த கோனிகா தேவி தனது சேலையில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

    தகவல் அறிந்த ஊத்துக்குளி போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று கோனிகா தேவி உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக திருப்பூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். மேலும் இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
    Next Story
    ×