search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கோப்புப்படம்
    X
    கோப்புப்படம்

    காதலியின் படத்தை சமூகவலைதளத்தில் பரப்புவதாக மிரட்டிய வாலிபர்

    சுரண்டை அருகே திருமண ஆசை காட்டி பலாத்காரம் செய்து காதலியின் படத்தை சமூக வலைத்தளத்தில் பரப்புவதாக மிரட்டிய வாலிபரை போலீசார் தேடி வருகின்றனர்.
    ஆலங்குளம்:

    தென்காசி மாவட்டம் சுரண்டை அருகே உள்ள சேர்ந்தமரத்தை அடுத்த குலசேகரமங்கலம் கிராமத்தை சேர்ந்தவர் முத்து சரவணன்(வயது 25).

    இவருக்கு ஒரு இளம்பெண்ணுடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது. இவர்களது பழக்கம் காதலாக மாறி 2 பேரும் பல வருடங்களாக காதலித்து வந்துள்ளனர்.

    மேலும் அவர்கள் 2 பேரும் பல்வேறு இடங்களுக்கு மோட்டார் சைக்கிளில் சுற்றி வந்துள்ளனர். அடிக்கடி தனிமையிலும் சந்தித்து பேசி உள்ளனர். இதை பயன்படுத்தி முத்து சரவணன் அந்த இளம்பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்ததாக கூறப்படுகிறது.

    இந்நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு அந்த இளம்பெண், தன்னை திருமணம் செய்து கொள்ளும்படி முத்து சரவணனிடம் கேட்டுள்ளார். அதற்கு முத்து சரவணன் மறுப்பு தெரிவித்துள்ளார். இதனால், தான் ஏமாற்றப்பட்டது குறித்து அறிந்த இளம்பெண் செய்வதறியாது திகைத்தார்.

    மேலும் முத்து சரவணன் காதலர்கள் 2 பேரும் தனிமையில் இருந்தபோது எடுத்த புகைப்படம் மற்றும் வீடியோக்களை சமூக வலைத்தளங்களில் வெளியிடுவேன் எனவும் மிரட்டி உள்ளார்.

    இதனால் இளம்பெண் ஆலங்குளம் அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார்.

    அவர் அளித்த புகாரின் பேரில் போலீசார் வழக்குப் பதிவு செய்து முத்து சரவணனை தேடி வருகின்றனர்.
    Next Story
    ×