என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
நாமக்கல் உழவர் சந்தையில் ரூ.5 லட்சத்துக்கு காய்கறி, பழங்கள் விற்பனை
Byமாலை மலர்8 Feb 2021 10:30 AM GMT (Updated: 8 Feb 2021 10:30 AM GMT)
நாமக்கல் உழவர் சந்தையில் 22 டன் காய்கறி மற்றும் பழங்கள் ரூ.5 லட்சத்துக்கு விற்பனையானது.
நாமக்கல்:
நாமக்கல்- கோட்டை சாலையில் உழவர் சந்தை செயல்பட்டு வருகிறது. இங்கு நாமக்கல் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் விளையும் காய்கறிகளை விவசாயிகள் விற்பனை செய்து வருகின்றனர். இந்த சந்தையில் நேற்று 17¾ டன் காய்கறிகள் மற்றும் 4¼ டன் பழங்கள் விற்பனைக்கு வந்து இருந்தன. இவை ரூ.5 லட்சத்து 17 ஆயிரத்து 750-க்கு விற்பனை செய்யப்பட்டன. இவற்றை 2, 200 பேர் வாங்கி சென்றனர்.
நாமக்கல் உழவர் சந்தையில் நேற்று தக்காளி கிலோ ரூ.20-க்கும், வெண்டைக்காய் கிலோ ரூ.54-க்கும், புடலங்காய் கிலோ ரூ.24-க்கும், பீர்க்கன் கிலோ ரூ.50-க்கும், கேரட் கிலோ ரூ.40-க்கும், பீட்ரூட் கிலோ ரூ.32-க்கும், பீன்ஸ் கிலோ ரூ.44-க்கும், உருளை கிழங்கு கிலோ ரூ.36-க்கும், இஞ்சி கிலோ ரூ.40-க்கும் விற்பனை செய்யப்பட்டன.
சின்ன வெங்காயம் கிலோ ரூ.55-க்கும், பெரிய வெங்காயம் கிலோ ரூ.50-க்கும் விற்பனை செய்யப்பட்டன. கடந்த வாரம் கத்தரி கிலோ ரூ.90-க்கு விற்பனை செய்யப்பட்டது. நேற்று கிலோவுக்கு ரூ.30 குறைந்து கிலோ ரூ.60-க்கு விற்பனை செய்யப்பட்டது.
கடந்த வாரத்தை ஒப்பிடும் போது காய்கறிகளின் வரத்து அதிகரித்து இருப்பதாகவும், அவற்றின் விலை குறைந்து காணப்பட்டதாகவும் உழவர் சந்தை அதிகாரிகள் தெரிவித்தனர்.
நாமக்கல்- கோட்டை சாலையில் உழவர் சந்தை செயல்பட்டு வருகிறது. இங்கு நாமக்கல் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் விளையும் காய்கறிகளை விவசாயிகள் விற்பனை செய்து வருகின்றனர். இந்த சந்தையில் நேற்று 17¾ டன் காய்கறிகள் மற்றும் 4¼ டன் பழங்கள் விற்பனைக்கு வந்து இருந்தன. இவை ரூ.5 லட்சத்து 17 ஆயிரத்து 750-க்கு விற்பனை செய்யப்பட்டன. இவற்றை 2, 200 பேர் வாங்கி சென்றனர்.
நாமக்கல் உழவர் சந்தையில் நேற்று தக்காளி கிலோ ரூ.20-க்கும், வெண்டைக்காய் கிலோ ரூ.54-க்கும், புடலங்காய் கிலோ ரூ.24-க்கும், பீர்க்கன் கிலோ ரூ.50-க்கும், கேரட் கிலோ ரூ.40-க்கும், பீட்ரூட் கிலோ ரூ.32-க்கும், பீன்ஸ் கிலோ ரூ.44-க்கும், உருளை கிழங்கு கிலோ ரூ.36-க்கும், இஞ்சி கிலோ ரூ.40-க்கும் விற்பனை செய்யப்பட்டன.
சின்ன வெங்காயம் கிலோ ரூ.55-க்கும், பெரிய வெங்காயம் கிலோ ரூ.50-க்கும் விற்பனை செய்யப்பட்டன. கடந்த வாரம் கத்தரி கிலோ ரூ.90-க்கு விற்பனை செய்யப்பட்டது. நேற்று கிலோவுக்கு ரூ.30 குறைந்து கிலோ ரூ.60-க்கு விற்பனை செய்யப்பட்டது.
கடந்த வாரத்தை ஒப்பிடும் போது காய்கறிகளின் வரத்து அதிகரித்து இருப்பதாகவும், அவற்றின் விலை குறைந்து காணப்பட்டதாகவும் உழவர் சந்தை அதிகாரிகள் தெரிவித்தனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X