search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கோப்புபடம்
    X
    கோப்புபடம்

    தரகம்பட்டி அருகே விஷம் குடித்த தொழிலாளி பலி

    தரகம்பட்டி அருகே விஷம் குடித்த தொழிலாளி பலியான சம்பவம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
    தரகம்பட்டி:

    தரகம்பட்டியை சேர்ந்த லட்சுமணன் மகன் சக்திவேல்(வயது 45). கூலி தொழிலாளியான இவர் கடந்த சில நாட்களாகவே தலைவலி காரணமாக அவதிப்பட்டு வந்துள்ளார். இந்த நிலையில் கடந்த 31-ந் தேதி விஷம் குடித்து தற்கொலைக்கு முயன்றார். இதனை கண்ட உறவினர்கள் அவரை மீட்டு சிகிச்சைக்காக மணப்பாறையில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர். 

    பின்னர் அங்கிருந்து மேல்சிகிச்சைக்காக திருச்சியில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இதுகுறித்து சிந்தாமணிபட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
    Next Story
    ×