என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
கன்னியாகுமரியில் குவிந்த சுற்றுலா பயணிகள்- கடற்கரை களை கட்டியது
Byமாலை மலர்1 Feb 2021 4:36 AM GMT (Updated: 1 Feb 2021 4:36 AM GMT)
கன்னியாகுமரியில் விடுமுறை தினமான நேற்று ஏராளமான சுற்றுலா பயணிகள் குவிந்தனர். இதனால் கடற்கரை களை கட்டியது.
கன்னியாகுமரி:
உலகப்புகழ் பெற்ற சுற்றுலா தலமான கன்னியாகுமரிக்கு தினமும் ஆயிரக்கணக்கான உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் வருகிறார்கள். இங்கு நவம்பர், டிசம்பர், ஜனவரி ஆகிய மாதங்கள் சுற்றுலா பயணிகளின் வருகை அதிகமாக இருக்கும். இந்த மாதங்களில் சபரிமலை அய்யப்ப பக்தர்களின் வருகையும் அதிகமாக காணப்படும். இதனால் இந்த 3 மாதமும் கன்னியாகுமரியில் மெயின் சீசன் காலமாக கருதப்படுகிறது. இதுபோல் ஏப்ரல், மே மாதங்களில் கோடை விடுமுறை சீசன் காலத்திலும் ஏராளமானோர் கன்னியாகுமரிக்கு வருவார்கள்.
இந்த ஆண்டு கொரோனா ஊரடங்கு காரணமாக சபரிமலை சீசனில் அய்யப்ப பக்தர்கள் வரவில்லை.
தற்போது கொரோனா ஊரடங்கு தளர்த்தப்பட்டு சுற்றுலா தலங்கள் திறக்கப்பட்டன. இதையடுத்து கன்னியாகுமரிக்கு சுற்றுலா பயணிகள் வரத் தொடங்கியுள்ளனர்.
விடுமுறை தினமான நேற்று ஏராளமான சுற்றுலா பயணிகள் கன்னியாகுமரிக்கு வந்தனர். அவர்கள் காலையில் சூரிய உதயத்தை கண்டுகளித்து, கடற்கரையில் விளையாடி மகிழ்ந்தனர். கன்னியாகுமரியில் முக்கடலும் சங்கமிக்கும் திரிவேணி சங்கமம் சங்கிலித்துறை கடற்கரையில் காலை மற்றும் மாலை வேளைகளில் சுற்றுலா பயணிகளின் கூட்டம் அலைமோதியது. இதனால் கடற்கரை களை கட்டியது. ஏராளமானோர் வாகனங்களில் வந்ததால் கன்னியாகுமரியில் கடும் போக்குவரத்து நெருக்கடி ஏற்பட்டது. போலீசார் போக்குவரத்தை ஒழுங்குபடுத்தினர்.
உலகப்புகழ் பெற்ற சுற்றுலா தலமான கன்னியாகுமரிக்கு தினமும் ஆயிரக்கணக்கான உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் வருகிறார்கள். இங்கு நவம்பர், டிசம்பர், ஜனவரி ஆகிய மாதங்கள் சுற்றுலா பயணிகளின் வருகை அதிகமாக இருக்கும். இந்த மாதங்களில் சபரிமலை அய்யப்ப பக்தர்களின் வருகையும் அதிகமாக காணப்படும். இதனால் இந்த 3 மாதமும் கன்னியாகுமரியில் மெயின் சீசன் காலமாக கருதப்படுகிறது. இதுபோல் ஏப்ரல், மே மாதங்களில் கோடை விடுமுறை சீசன் காலத்திலும் ஏராளமானோர் கன்னியாகுமரிக்கு வருவார்கள்.
இந்த ஆண்டு கொரோனா ஊரடங்கு காரணமாக சபரிமலை சீசனில் அய்யப்ப பக்தர்கள் வரவில்லை.
தற்போது கொரோனா ஊரடங்கு தளர்த்தப்பட்டு சுற்றுலா தலங்கள் திறக்கப்பட்டன. இதையடுத்து கன்னியாகுமரிக்கு சுற்றுலா பயணிகள் வரத் தொடங்கியுள்ளனர்.
விடுமுறை தினமான நேற்று ஏராளமான சுற்றுலா பயணிகள் கன்னியாகுமரிக்கு வந்தனர். அவர்கள் காலையில் சூரிய உதயத்தை கண்டுகளித்து, கடற்கரையில் விளையாடி மகிழ்ந்தனர். கன்னியாகுமரியில் முக்கடலும் சங்கமிக்கும் திரிவேணி சங்கமம் சங்கிலித்துறை கடற்கரையில் காலை மற்றும் மாலை வேளைகளில் சுற்றுலா பயணிகளின் கூட்டம் அலைமோதியது. இதனால் கடற்கரை களை கட்டியது. ஏராளமானோர் வாகனங்களில் வந்ததால் கன்னியாகுமரியில் கடும் போக்குவரத்து நெருக்கடி ஏற்பட்டது. போலீசார் போக்குவரத்தை ஒழுங்குபடுத்தினர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X