என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
உரிய மதிப்பளிக்காவிடில் தனித்து போட்டி- பிரேமலதா
Byமாலை மலர்30 Jan 2021 11:09 AM GMT (Updated: 30 Jan 2021 11:39 AM GMT)
அதிமுக கூட்டணியில் நமக்கு உரிய மதிப்பளிக்காவிடில் 234 தொகுதிகளிலும் தனித்து போட்டியிட தயாராக இருக்க வேண்டும் என்று பிரேமலதா விஜயகாந்த் கூறியுள்ளார்.
சென்னை:
விஜயகாந்த் தலைமையிலான தே.மு.தி.க. கடந்த 2006-ம் ஆண்டு முதல் முதலாக சட்டசபை தேர்தலை சந்தித்தது. தே.மு.தி.க. தனித்து போட்டியிட்ட நிலையில் விஜயகாந்த் வெற்றி பெற்றார். அந்த தேர்தலில் தே.மு.தி.க.வுக்கு 10 சதவீதம் ஓட்டுகள் கிடைத்தன.
2011-ம் ஆண்டு நடைபெற்ற சட்டசபை தேர்தலில் அ.தி.மு.க. கூட்டணியில் 41 இடங்களில் தே.மு.தி.க. போட்டியிட்டது. இந்த தேர்தலில் தே.மு.தி.க.வுக்கு எதிர்க்கட்சி அந்தஸ்து கிடைத்தது.
ஆனால் கடந்த சட்டசபை தேர்தலில் தே.மு.தி.க. மக்கள் நல கூட்டணியில் போட்டியிட்டது. முதல்- அமைச்சர் வேட்பாளராக விஜயகாந்த் அறிவிக்கப்பட்ட போதிலும் தே.மு.தி.க. அனைத்து தொகுதிகளிலும் தோல்வியை தழுவியது.
அ.தி.மு.க. கூட்டணியில் தங்களுக்கு 41 இடங்கள் ஒதுக்கப்பட வேண்டும் என்று தே.மு.தி.க. பிடிவாதம் காட்டி வருகிறது. அதை அ.தி.மு.க. கண்டு கொள்ளாமல் தே.மு.தி.க.வை கொஞ்சம் விட்டுபிடிக்கலாம் என்று கருதுவதாக கூறப்படுகிறது.
தி.மு.க. கூட்டணியில் தே.மு.தி.க. இடம்பெறாது என்று அ.தி.மு.க. உறுதியாக நம்புகிறது. எனவே தே.மு.தி.க.வுடன் தொகுதி உடன்பாடு குறித்த பேச்சுவார்த்தையை அ.தி.மு.க. இதுவரை தொடங்கவில்லை. அதே நேரத்தில் பா.ம.க., பா.ஜனதாவுடன் அ.தி.மு.க. பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது.
அ.தி.மு.க. கூட்டணியில் தே.மு.தி.க. 41 இடங்களை எதிர்பார்க்கும் நிலையில் அந்த கட்சிக்கு 10 இடங்களை மட்டுமே ஒதுக்க அ.தி.மு.க. தலைமை முடிவு செய்து இருப்பதாக கூறப்படுகிறது. குறைந்த அளவு தொகுதிகளை ஏற்க தே.மு.தி.க. தயக்கம் காட்டி வருகிறது.
இந்த நிலையில் சென்னை கோயம்பேடு தேமுதிக தலைமை அலுவலகத்தில் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில் பேசிய பிரேமலதா விஜயகாந்த் , அதிமுக கூட்டணியில் நமக்கு உரிய மதிப்பளிக்காவிடில் 234 தொகுதிகளிலும் தனித்து போட்டியிட தயாராக இருக்க வேண்டும்.
சட்டமன்ற தேர்தல் கூட்டணி குறித்து நாளை முக்கிய முடிவை விஜயகாந்த அறிவிப்பார் என்றார்.
இக்கூட்டத்தில் துணை செயலாளர்கள் எல்.கே.சுதீஷ், பார்த்த சாரதி மற்றும் மாநில நிர்வாகிகள் பங்கேற்றனர்.
மேலும் 234 தொகுதி பொறுப்பாளர்கள், மண்டல பொறுப்பாளர்கள், மாவட்ட தேர்தல் பொறுப்பாளர்கள் என மொத்தம் 320 பேர் கலந்து கொண்டனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X