என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
கரூர் அருகே சரக்கு ரெயில் மோதி 3 வயது குழந்தை பலி
Byமாலை மலர்29 Jan 2021 1:56 PM GMT (Updated: 29 Jan 2021 1:56 PM GMT)
கரூர் அருகே தண்டவாளத்தில் விளையாடிக் கொண்டிருந்த குழந்தை சரக்கு ரெயில் மோதி இறந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
கரூர்:
கரூர் மாவட்டம், லாலாபேட்டை அருகே உள்ள திம்மாச்சிபுரத்தை சேர்ந்தவர் செந்தில்குமார். இவரது மகன் ருத்ரன் (வயது 3). இந்தநிலையில் செந்தில்குமார் வீட்டின் பின்புறம் ரெயில்வே தண்டவாளம் உள்ளது. நேற்று முன்தினம் மாலை ருத்ரன் ரெயில்வே தண்டவாளத்தில் விளையாடி கொண்டிருந்தான்.
அப்போது, கரூரில் இருந்து திருச்சி நோக்கி சென்ற சரக்கு ரெயில் ஒன்று ருத்ரன் மீது மோதியது. இதில் ருத்ரன் உடல் சிதறி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தான். இதையடுத்து ருத்ரன் பெற்றோர் மற்றும் உறவினர்கள் சம்பவ இடத்திற்கு வந்து உடலை பார்த்து கதறி அழுதனர்.
இதுகுறித்து கரூர் ரெயில்வே போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதன்பேரில் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து ருத்ரனின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக குளித்தலை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இதுகுறித்து கரூர் ரெயில்வே போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். தண்டவாளத்தில் விளையாடிக் கொண்டிருந்த குழந்தை சரக்கு ரெயில் மோதி இறந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
கரூர் மாவட்டம், லாலாபேட்டை அருகே உள்ள திம்மாச்சிபுரத்தை சேர்ந்தவர் செந்தில்குமார். இவரது மகன் ருத்ரன் (வயது 3). இந்தநிலையில் செந்தில்குமார் வீட்டின் பின்புறம் ரெயில்வே தண்டவாளம் உள்ளது. நேற்று முன்தினம் மாலை ருத்ரன் ரெயில்வே தண்டவாளத்தில் விளையாடி கொண்டிருந்தான்.
அப்போது, கரூரில் இருந்து திருச்சி நோக்கி சென்ற சரக்கு ரெயில் ஒன்று ருத்ரன் மீது மோதியது. இதில் ருத்ரன் உடல் சிதறி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தான். இதையடுத்து ருத்ரன் பெற்றோர் மற்றும் உறவினர்கள் சம்பவ இடத்திற்கு வந்து உடலை பார்த்து கதறி அழுதனர்.
இதுகுறித்து கரூர் ரெயில்வே போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதன்பேரில் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து ருத்ரனின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக குளித்தலை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இதுகுறித்து கரூர் ரெயில்வே போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். தண்டவாளத்தில் விளையாடிக் கொண்டிருந்த குழந்தை சரக்கு ரெயில் மோதி இறந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X