என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
10 மாதங்களுக்கு பிறகு எழும்பூரில் இருந்து புதுச்சேரிக்கு சிறப்பு ரெயில் சேவை
சென்னை:
கொரோனா பாதிப்பு குறைந்து வருவதன் காரணமாக ரெயில் போக்குவரத்து படிப்படியாக இயல்பு நிலைக்கு திரும்புகிறது.
அனைத்து ரெயில்களும் சிறப்பு ரெயில்களாக இயக்கப்படுகின்றன. 10 மாதமாக நிறுத்தப்பட்டிருந்த சென்னை எழும்பூர் - புதுச்சேரி ரெயில் சேவை மீண்டும் தொடங்குகிறது.
வருகிற 31-ந் தேதி முதல் இந்த சேவையை தொடங்குவதற்கு ரெயில்வே வாரியம் அனுமதி அளித்துள்ளது. புதுச்சேரி, மைசூர் உள்ளிட்ட 4 ரெயில்கள் இயக்கப்படுகின்றன.
எழும்பூரில் இருந்து மாலை 6.10 மணிக்கு விரைவு சிறப்பு ரெயில் (06115) புறப்பட்டு இரவு 10.15 மணிக்கு புதுச்சேரி யை சென்று அடையும்.
இதேபோல புதுச்சேரியில் இருந்து தினசரி அதிகாலை 5.35 மணிக்கு விரைவு சிறப்பு ரெயில் (06116) புறப்பட்டு காலை 9.30 மணிக்கு எழும்பூர் வந்து சேரும்.
சென்னை சென்ட்ரலில் இருந்து தினசரி இரவு 9.15 மணிக்கு சிறப்பு ரெயில் (06021) புறப்பட்டு மறுநாள் காலை 6.40 மணிக்கு மைசூரை சென்றடையும்.
மறு மார்க்கமாக மைசூரில் இருந்து தினசரி இரவு 9 மணிக்கு சிறப்பு ரெயில் (06022) புறப்பட்டு மறுநாள் காலை 6.40 மணிக்கு சென்னை சென்ட்ரலை வந்து சேரும். இந்த ரெயில் சேவை வருகிற 30-ந் தேதியில் இருந்து தொடங்குகிறது.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்