என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
காசோலை மோசடி வழக்கில் வணிக வரித்துறை ஊழியருக்கு 10 மாதம் சிறை
Byமாலை மலர்26 Jan 2021 9:48 AM GMT (Updated: 26 Jan 2021 9:48 AM GMT)
ரூ.5 லட்சம் காசோலை மோசடி வழக்கில் வணிக வரித்துறை ஊழியருக்கு 10 மாதம் சிறை தண்டனை விதித்து தேனி விரைவு கோர்ட்டு தீர்ப்பு அளித்தது.
தேனி:
தேனி பவர்ஹவுஸ் தெருவை சேர்ந்த தனிக்கொடி மகன் தயாளன் (வயது 36). இவர் அரசு போக்குவரத்து கழகத்தில் டிரைவராக பணியாற்றி வருகிறார். இவரிடம், கடந்த 2019-ம் ஆண்டு தேனி வணிகவரித்துறை அலுவலகத்தில் உதவி எழுத்தராக பணியாற்றிய லதா என்பவர் ரூ.5 லட்சம் கடன் பெற்றார். அவர் இந்த கடன் தொகைக்கு காசோலை அளித்தார்.
அந்த காசோலையை தயாளன் தனது வங்கிக் கணக்கில் செலுத்தினார். அப்போது லதாவின் வங்கிக் கணக்கில் போதிய பணம் இல்லை என்று கூறி காசோலை திரும்பியது. இதற்கிடையே லதா திண்டுக்கல் வணிக வரித்துறை அலுவலகத்துக்கு பணியிட மாறுதலாகி சென்று விட்டார்.
இந்த நிலையில் தேனி நீதித்துறை நடுவர் விரைவு கோர்ட்டில் தயாளன், லதா மீது வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கு விசாரணையை தொடர்ந்து, நீதிபதி ரூபனா நேற்று தீர்ப்பு அளித்தார். இந்த வழக்கில் லதாவுக்கு 10 மாதம் சிறை தண்டனை விதித்ததுடன், அவர் கடனாக வாங்கிய ரூ.5 லட்சத்தை 9 சதவீதம் வட்டியுடன் திரும்பிக் கொடுக்க வேண்டும் என்றும், திருப்பிக் கொடுக்காவிட்டால் மேலும் 3 மாதம் சிறை தண்டனை விதித்தும் நீதிபதி தீர்ப்பளித்தார்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X