search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "காசோலை மோசடி"

    • காசோலையை வங்கியில் வசூலுக்காக கொடுத்த போது கையெழுத்து மாறியுள்ளதாக திரும்பி வந்துவிட்டது.
    • வங்கி கணக்கில் ரூ.2லட்சத்ைத அனுப்பி வைத்து பின்னர் பொருட்கள் வாங்கி தரவில்லை.

    தேனி:

    தேனி அருகே பழனி செட்டி பட்டியை சேர்ந்தவர் பன்னீர்செல்வம்(67). இவரும், இவரது உறவினர் செந்தில்குமார்(45) என்பவரும் வீட்டில் உள்அல ங்காரம் தொழிலை அபிவிரு த்தி செய்ய முடிவு செய்தனர். அதன்படி செந்தில்குமார் ரூ.9 லட்சத்தை கடனாக கேட்டார். 3 மாதத்தில் திருப்பி தருவதாக தெரி வித்துள்ளார்.

    இதனைதொடர்ந்து பன்னீர்செல்வம் அவருக்கு பணம் கொடுத்துள்ளார். அதன்பின்னர் காசோலை மூலம் பணத்தை தருவதாக செந்தில்குமார் தெரிவித்து ள்ளார். அந்த காசோலையை வங்கியில் வசூலுக்காக கொடுத்த போது கையெழுத்து மாறியுள்ளதாக திரும்பி வந்துவிட்டது. இதுகுறித்து கேட்டபோது எந்தபதிலும் இல்லை. இதனால் அதிர்ச்சி அடைந்த பன்னீர்செல்வம் தேனி குற்றவியல் நீதித்துறை நடுவர் நீதிமன்றத்தில் மனு அளித்தார்.

    கோர்ட்டு உத்தரவுப்படி பழனிசெட்டிபட்டி போலீசார் வழக்குபதிவு செய்து செந்தில்குமாரிடம் விசாரித்து வருகின்றனர்.

    தேனி அருகே மாரியம்ம ன்கோவில்பட்டியை சேர்ந்தவர் பிரித்தி விராஜ்(32). இவர் கணினி விற்பனை மற்றும் சர்வீஸ் சென்டர் வைத்துள்ளார். மதுரை சிம்மக்கல் பகுதியை சேர்ந்த தினேஷ் என்பவரு டன் பழக்கம் ஏற்பட்டு இணையதளம் மூலம் பொரு ட்கள் வாங்கி தருவதாக கூறியுள்ளார். இதனை தொடர்ந்து பிரித்திவிராஜ் தினேசின் வங்கி கணக்கில் ரூ.2லட்சத்ைத அனுப்பி வைத்தார். ஆனால் அதன்பின்னர் பொருட்கள் வாங்கி தரவில்லை. மேலும் செல்போனையும் சுவி ட்ச்ஆப் செய்து விட்டதால் மதுரைக்கு சென்றார். அங்கு தினேஷ் கடையை காலி செய்து விட்டதாக அருகில் இருந்த வர்கள் தெரிவித்தனர்.

    இதுகுறித்து தேனி குற்றவியல் நீதித்துறை நடுவர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். கோர்ட்டு உத்தரவுப்படி பழனிசெட்டிபட்டி போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • வாலிபர்கள் 3 பேர் கைது செய்யப்பட்டனர்.
    • போலீசார் 24 மணிநேரத்தில் கைது செய்தனர்.

    கோவை:

    கோவை ராமநாதபுரம் கிருஷ்ணசாமி நகரை சேர்ந்தவர் அனிஷ்பிரசன்னா (வயது 27) இவர் ராமநாதபுரம் போலீசில் புகார் ஒன்று அளித்தார். அதில் கூறியிருப்பதாவது:-

    நான் கோவை திருச்சி ரோட்டில் கார் விற்பனை மற்றும் சர்வீஸ் சென்டர்.நடத்தி வருகிறேன். தனது நிறுவனத்தில் சாவணன் என்பவர் மேலாளராக பணிபுரிந்து வருகிறார்.

    சம்பவத்தன்று மேலாளர் சரவணன் தங்களது நிறுவன கணக்குகளை சரிபார்த்தார். அப்போது நிறுவனத்தின் கணக்கில் இருந்து ரூ.42,98,100 எடுக்கப்பட்டிருப்பது தெரியவந்தது. இதையத்து, எங்களது நிறுவனம் வரவு செலவு வைத்துள்ள வங்கியில் விசாரித்தபோது வங்கி மூலம் பணப்பரிவர்த்தனை செய்யப்பட்டு இருந்தது தெரியவந்தது. மேலும் வங்கியில் எங்களது காசோலையையும் காண்பித்தனர்.

    அதில் காசோலையை கொண்டு வந்து வங்கியில் செலுத்தியது எங்களது நிறுவனத்தில் வேலை செய்து வந்த கணக்காளர் சேலத்தை ச்சேர்ந்த வெங்கடசு ப்ரமணியன் என்பதும் தெரியவந்தது. அவர் நிறுவனத்தின் காசோலையத் திருடி போலியாக கையெழுத்து போட்டு திருவ ண்ணா மலை யில் உள்ள நபரின் வங்கி கணக்கிற்கு ரூ.42,98,100 மாற்றி உள்ளார். எனவே அவர் மீது நடவடிக்கை எடுத்து பணத்தை மீட்டு தர வேண்டும்.

    இவ்வாறு அந்த புகாரில் தெரிவிக்கப்பட்டு இருந்தது.

    இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து தனிப்படை அமைக்கப்பட்டது. தனிப்படை போலீசார் தலைம றைவாக இருந்தவர்களை தேடி திருவண்ணாமலை மற்றும் ஆரணி ஆகிய இடங்களுக்கு சென்றனர்.

    அப்போது அங்கு பதுங்கியிருந்த மோசடிக்கு துணைபோன ஆரணியை சேர்ந்த சிவா, புதுச்சேரியை சேர்ந்த கார்த்திக், தினேஷ்பாபு ஆகியோரை 24 மணிநேரத்தில் கைது செய்தனர். அவர்கள் மோசடி செய்த ரூ.42,98,100-யை பறிமுதல் செய்தனர்.பின்னர் அவர்கள் கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

    ×