என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
விழுப்புரம் அருகே பஸ் மோதி கணவன்-மனைவி பலி
Byமாலை மலர்26 Jan 2021 7:31 AM GMT (Updated: 26 Jan 2021 7:31 AM GMT)
விழுப்புரம் அருகே அரசு டவுன் பஸ் மோதி கணவன்- மனைவி பலியாகினர். துக்க நிகழ்ச்சியில் கலந்துகொண்டு விட்டு வீடு திரும்பியபோது இந்த பரிதாப சம்பவம் நடந்தது.
விழுப்புரம்:
திருவண்ணாமலை மாவட்டம் வெரையூரை சேர்ந்தவர் சாமிக்கண்ணு (வயது 55). இவரது மனைவி ஒளியா(48). இவர்கள் இருவரும் நேற்று முன்தினம் விழுப்புரத்தில் உள்ள உறவினர் ஒருவர் வீட்டு துக்க நிகழ்ச்சியில் கலந்துகொள்ள திருவண்ணாமலையில் இருந்து விழுப்புரத்திற்கு மோட்டார் சைக்கிளில் வந்தனர்.
துக்க நிகழ்ச்சியை முடித்துவிட்டு கணவன்-மனைவி இருவரும் இரவு விழுப்புரத்தில் இருந்து திருவண்ணாமலைக்கு புறப்பட்டனர். விழுப்புரம் அருகே பெரும்பாக்கத்திற்கும் கோனூருக்கும் இடையே உள்ள கூட்டுசாலையில் வந்தபோது எதிரே திருக்கோவிலூரில் இருந்து விழுப்புரம் நோக்கி வந்த அரசு பஸ், எதிர்பாராதவிதமாக அவர்களது மோட்டார் சைக்கிள் மீது மோதியது.
இந்த விபத்தில் சாமிக்கண்ணு, ஒளியா ஆகிய இருவரும் பலத்த காயமடைந்து உயிருக்கு போராடிக்கொண்டிருந்தனர். அந்த வழியாக சென்ற பொதுமக்கள் அவர்கள் இருவரையும் மீட்டு சிகிச்சைக்காக ஆம்புலன்ஸ் மூலம் முண்டியம்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு சிகிச்சை பலன் இ்ன்றி சாமிக்கண்ணு, ஒளியா ஆகிய இருவரும் பரிதாபமாக இறந்தனர்.
விபத்து குறித்த புகாரின்பேரில் அரசு பஸ் டிரைவரான விழுப்புரம் அருகே சிந்தாமணியை சேர்ந்த பாண்டியன் மீது காணை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
திருவண்ணாமலை மாவட்டம் வெரையூரை சேர்ந்தவர் சாமிக்கண்ணு (வயது 55). இவரது மனைவி ஒளியா(48). இவர்கள் இருவரும் நேற்று முன்தினம் விழுப்புரத்தில் உள்ள உறவினர் ஒருவர் வீட்டு துக்க நிகழ்ச்சியில் கலந்துகொள்ள திருவண்ணாமலையில் இருந்து விழுப்புரத்திற்கு மோட்டார் சைக்கிளில் வந்தனர்.
துக்க நிகழ்ச்சியை முடித்துவிட்டு கணவன்-மனைவி இருவரும் இரவு விழுப்புரத்தில் இருந்து திருவண்ணாமலைக்கு புறப்பட்டனர். விழுப்புரம் அருகே பெரும்பாக்கத்திற்கும் கோனூருக்கும் இடையே உள்ள கூட்டுசாலையில் வந்தபோது எதிரே திருக்கோவிலூரில் இருந்து விழுப்புரம் நோக்கி வந்த அரசு பஸ், எதிர்பாராதவிதமாக அவர்களது மோட்டார் சைக்கிள் மீது மோதியது.
இந்த விபத்தில் சாமிக்கண்ணு, ஒளியா ஆகிய இருவரும் பலத்த காயமடைந்து உயிருக்கு போராடிக்கொண்டிருந்தனர். அந்த வழியாக சென்ற பொதுமக்கள் அவர்கள் இருவரையும் மீட்டு சிகிச்சைக்காக ஆம்புலன்ஸ் மூலம் முண்டியம்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு சிகிச்சை பலன் இ்ன்றி சாமிக்கண்ணு, ஒளியா ஆகிய இருவரும் பரிதாபமாக இறந்தனர்.
விபத்து குறித்த புகாரின்பேரில் அரசு பஸ் டிரைவரான விழுப்புரம் அருகே சிந்தாமணியை சேர்ந்த பாண்டியன் மீது காணை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X