என் மலர்
செய்திகள்

கோப்பு படம்
ராணிப்பேட்டையில் விளக்கு தீ பட்டு பெண் பலி
ராணிப்பேட்டையில் வீட்டில் தூங்கிக் கொண்டிருந்த பெண் மீது விளக்கு தீ பட்டதில் படுகாயம் அடைந்த அவர் பரிதாபமாக உயிரிழந்தார்.
சிப்காட் (ராணிப்பேட்டை):
ராணிப்பேட்டை காரை பகுதியை சேர்ந்தவர் தேவகி (வயது 56). இவர் கடந்த 17-ந் தேதி இரவு வீட்டில் மண்எண்ணெய் விளக்கை ஏற்றி வைத்துவிட்டு தூங்கிக் கொண்டிருந்தார். அப்போது விளக்கு தீ எதிர் பாராதவிதமாக தேவகி மீது பட்டு படுகாயமடைந்தார்.
அதைத்தொடர்ந்து அவர் வாலாஜா அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு மேல்சிகிச்சைக்காக வேலூர் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். அங்கு சிகிச்சை பலனின்றி நேற்று இறந்து விட்டார்.
இது குறித்து ராணிப்பேட்டை போலிசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Next Story