என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
நெல்லையில் குளத்தில் பிணமாக கிடந்த வாலிபர்- போலீசார் விசாரணை
Byமாலை மலர்25 Jan 2021 4:46 AM GMT (Updated: 25 Jan 2021 4:46 AM GMT)
நெல்லையில் குளத்தில் வாலிபர் பிணமாக கிடந்தார். இதுதொடர்பாக போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள்.
நெல்லை:
நெல்லை புதிய பஸ் நிலையம் அருகே வேய்ந்தான் குளம் உள்ளது. இந்த குளத்தின் மையப்பகுதியில் நேற்று காலை ஒரு வாலிபரின் பிணம் மிதப்பதாக மேலப்பாளையம் போலீசாருக்கு தகவல் கிடைத்தது.
உடனடியாக போலீசார் மற்றும் பாளையங்கோட்டை தீயணைப்பு வீரர்கள் அங்கு விரைந்து வந்தனர். அவர்கள் குளத்துக்குள் இறங்கி அழுகிய நிலையில் மிதந்த வாலிபரின் உடலை மீட்டு கரைக்கு கொண்டு வந்தனர்.
அப்போது அவரது சட்டைப்பையில் இருந்து கிடைத்த ஓட்டுனர் உரிமத்தை பார்த்த போது, நாங்குநேரி அருகே உள்ள கருவேலங்குளம் பகுதியை சேர்ந்த அரிகரசுதன் (வயது 35) என்பது தெரியவந்தது. இதையடுத்து அவரது உடலை பிரேத பரிசோதனைக்காக ஐகிரவுண்டு அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
அவர் எப்படி இறந்தார்? என்பது குறித்து மேலப்பாளையம் போலீசார் வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
நெல்லை புதிய பஸ் நிலையம் அருகே வேய்ந்தான் குளம் உள்ளது. இந்த குளத்தின் மையப்பகுதியில் நேற்று காலை ஒரு வாலிபரின் பிணம் மிதப்பதாக மேலப்பாளையம் போலீசாருக்கு தகவல் கிடைத்தது.
உடனடியாக போலீசார் மற்றும் பாளையங்கோட்டை தீயணைப்பு வீரர்கள் அங்கு விரைந்து வந்தனர். அவர்கள் குளத்துக்குள் இறங்கி அழுகிய நிலையில் மிதந்த வாலிபரின் உடலை மீட்டு கரைக்கு கொண்டு வந்தனர்.
அப்போது அவரது சட்டைப்பையில் இருந்து கிடைத்த ஓட்டுனர் உரிமத்தை பார்த்த போது, நாங்குநேரி அருகே உள்ள கருவேலங்குளம் பகுதியை சேர்ந்த அரிகரசுதன் (வயது 35) என்பது தெரியவந்தது. இதையடுத்து அவரது உடலை பிரேத பரிசோதனைக்காக ஐகிரவுண்டு அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
அவர் எப்படி இறந்தார்? என்பது குறித்து மேலப்பாளையம் போலீசார் வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X