என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
ஆட்டோவில் கடத்திய 300 மதுபாட்டில்கள் பறிமுதல் - ஒருவர் கைது
Byமாலை மலர்21 Jan 2021 11:29 AM GMT (Updated: 21 Jan 2021 11:29 AM GMT)
புதுச்சேரியில் இருந்து திருவெண்ணெய்நல்லூருக்கு ஆட்டோவில் கடத்திய 300 மதுபாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்ட சம்பவம் தொடர்பாக ஒருவரை போலீசார் கைது செய்தனர்.
விழுப்புரம்:
புதுச்சேரியில் இருந்து திருவெண்ணெய்நல்லூர் பகுதிக்கு மதுபாட்டில்கள் கடத்தப்படுவதாக மாவட்ட போலீஸ் சூப்பிரண்டின் சிறப்பு தனிப்படை போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து தனிப்படை போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ஆனந்தன் தலைமையிலான போலீசார் நேற்று முன்தினம், கரடிப்பாக்கம் பகுதியில் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அந்த வழியாக வேகமாக வந்த ஒரு ஆட்டோவை போலீசார் சந்தேகத்தின்பேரில் வழிமறித்தனர். போலீசாரை பார்த்ததும் ஆட்டோவில் இருந்த 2 பேரில் ஒருவர் கீழே இறங்கி தப்பி ஓடிவிட்டார். மற்றொருவர் பிடிபட்டார். பின்னர் அந்த ஆட்டோவை போலீசார் சோதனை செய்ததில் ஆட்டோவில் பயணிகள் அமரும் இருக்கைக்கு கீழ் பகுதியில் 300 மதுபாட்டில்கள் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. விசாரணையில் பிடிபட்ட நபர், கரடிப்பாக்கத்தை சேர்ந்த முருகன் (வயது 42) என்பதும் தப்பி ஓடியவர் அதே கிராமத்தை சேர்ந்த சேகர் என்பதும் இவர்கள் இருவரும் புதுச்சேரி மாநிலம் திருக்கனூர் பகுதியில் இருந்து மதுபாட்டில்களை கடத்தி வந்ததும் தெரியவந்தது.
இதையடுத்து முருகனை போலீசார் கைது செய்து அவரிடமிருந்த மதுபாட்டில்களையும் மற்றும் கடத்தலுக்கு பயன்படுத்தப்பட்ட ஆட்டோவையும் பறிமுதல் செய்தனர். மேலும் தப்பி ஓடிய சேகரை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X