என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
மோட்டார் சைக்கிள் வாங்கித்தர தந்தை மறுத்ததால் வாலிபர் தற்கொலை
Byமாலை மலர்21 Jan 2021 2:15 AM GMT (Updated: 21 Jan 2021 2:15 AM GMT)
மோட்டார் சைக்கிள் வாங்கித்தர தந்தை மறுத்ததால் பட்டதாரி வாலிபர் தூக்குப்போட்டு தற்கொலை செய்துகொண்டார்.
ஆவடி:
ஆவடியை அடுத்த கோவில்பதாகை கலைஞர் நகர் 2-வது தெருவைச் சேர்ந்தவர் தங்கராஜ். இவர், ஆவடியில் உள்ள மத்திய அரசின் ராணுவ தொழிற்சாலையில் வேலை செய்து வருகிறார். இவருடைய மகன் பரத்குமார் (வயது 22). பி.காம் படித்துள்ளார்.
இவர், தனது தந்தையிடம் மோட்டார் சைக்கிள் வாங்கித்தரும்படி கேட்டார். அதற்கு மறுத்த அவரது தந்தை, “இப்போது வாங்கி தர முடியாது. 2 மாதம் கழித்து நான் ஓய்வுபெற்ற பிறகு வாங்கித்தருகிறேன்” என்றார்.
இதனால் விரக்தி அடைந்த பரத்குமார், நேற்று முன்தினம் இரவு வீட்டின் படுக்கை அறைக்குள் சென்று உள்பக்கமாக தாழ்ப்பாள் போட்டுக்கொண்டார். நள்ளிரவு 2 மணியளவில் பரத்குமாரின் அறை கதவை அவரது பெற்றோர் நீண்டநேரம் தட்டியும் அவர் திறக்கவில்லை.
சந்தேகம் அடைந்த அவர்கள், கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்தனர். அங்கு பரத்குமார், மின்விசிறியில் புடவையால் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டிருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர்.
இதுபற்றி ஆவடி டேங்க் பேக்டரி போலீசார் வழக்குப்பதிவு செய்து பரத்குமாரின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக சென்னை கீழ்ப்பாக்கம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இதுபற்றி போலீசார் விசாரித்து வருகின்றனர்.
ஆவடியை அடுத்த கோவில்பதாகை கலைஞர் நகர் 2-வது தெருவைச் சேர்ந்தவர் தங்கராஜ். இவர், ஆவடியில் உள்ள மத்திய அரசின் ராணுவ தொழிற்சாலையில் வேலை செய்து வருகிறார். இவருடைய மகன் பரத்குமார் (வயது 22). பி.காம் படித்துள்ளார்.
இவர், தனது தந்தையிடம் மோட்டார் சைக்கிள் வாங்கித்தரும்படி கேட்டார். அதற்கு மறுத்த அவரது தந்தை, “இப்போது வாங்கி தர முடியாது. 2 மாதம் கழித்து நான் ஓய்வுபெற்ற பிறகு வாங்கித்தருகிறேன்” என்றார்.
இதனால் விரக்தி அடைந்த பரத்குமார், நேற்று முன்தினம் இரவு வீட்டின் படுக்கை அறைக்குள் சென்று உள்பக்கமாக தாழ்ப்பாள் போட்டுக்கொண்டார். நள்ளிரவு 2 மணியளவில் பரத்குமாரின் அறை கதவை அவரது பெற்றோர் நீண்டநேரம் தட்டியும் அவர் திறக்கவில்லை.
சந்தேகம் அடைந்த அவர்கள், கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்தனர். அங்கு பரத்குமார், மின்விசிறியில் புடவையால் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டிருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர்.
இதுபற்றி ஆவடி டேங்க் பேக்டரி போலீசார் வழக்குப்பதிவு செய்து பரத்குமாரின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக சென்னை கீழ்ப்பாக்கம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இதுபற்றி போலீசார் விசாரித்து வருகின்றனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X