search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கைது
    X
    கைது

    நெல்லை மாவட்டத்தில் மது விற்ற 307 பேர் கைது

    நெல்லை மாவட்டத்தில் மது விற்ற 307 பேரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
    நெல்லை:

    நெல்லை மாவட்டத்தில் சட்ட விரோதமாக மது விற்பனை மற்றும் தடை செய்யப்பட்ட புகையிலை விற்பனையை தடுக்க போலீஸ் சூப்பிரண்டு மணிவண்ணன் உத்தரவுப்படி போலீசார் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இதையொட்டி கடந்த 14-ந் தேதி பொங்கல் பண்டிகை நாளில் இருந்து 17-ந் தேதி வரை 4 நாட்கள் போலீசார் தீவிர சோதனை நடத்தினர். இதில் மதுபாட்டில்களை பதுக்கி வைத்து விற்பனை செய்ததாக 307 பேரை போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து 1,768 மதுபாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டன.
    Next Story
    ×