search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    டீம் இந்தியா, தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி
    X
    டீம் இந்தியா, தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி

    இந்திய அணிக்கு வாழ்த்துக்கள்: மூன்று தமிழக வீரர்களின் சிறப்பான பங்களிப்பு பெரும் மகிழ்ச்சி தருகிறது- முதல்வர் பழனிசாமி

    இந்திய அணி வெற்றி பெற்றதற்கு வாழ்த்துக்கள் தெரிவித்த தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி அஸ்வின், வாஷிங்டன் சுந்தர், டி நடராஜன் பங்களிப்பு மகிழ்ச்சி தருகிறது எனத் தெரிவித்துள்ளார்.
    இந்திய அணி பிரிஸ்பேனில் நடைபெற்ற ஆஸ்திரேலியாவுக்கு எதிராக கடைசி டெஸ்ட் போட்டியில் வரலாற்று வெற்றி பெற்றதுடன், தொடரையும் 2-1 எனக் கைப்பற்றியுள்ளது.

    அனுபவ வீரர்களான விராட் கோலி, பும்ரா, ஷமி, இஷாந்த் சர்மா, ஜடேஜா, அஸ்வின் போன்றோர் இல்லாமல் இந்த வெற்றியை பதிவு செய்துள்ளது. இந்த வெற்றி மிகமிக முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்படுகிறது.

    இந்திய அணிக்கு பிரதமர் மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார். பிசிசிஐ 5 கோடி ரூபாய் ஊக்கத்தொகை வழங்கியுள்ளது. இந்த நிலையில் தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியும் தனது வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார்.

    தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தனது டுவிட்டர் பக்கத்தில் ‘‘பல நட்சத்திர வீரர்கள் இல்லாத நிலையிலும் வரலாற்று சிறப்புமிக்க டெஸ்ட் தொடர் வெற்றியை பெற்ற இந்திய அணிக்கு என் வாழ்த்துக்கள். இதில் நமது மூன்று தமிழக வீரர்களின் சிறப்பான பங்களிப்பு பெரும் மகிழ்ச்சியை தருகிறது’’  எனத் தெரிவித்துள்ளார்.
    Next Story
    ×