என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
வீட்டின் பூட்டை உடைத்து 20 பவுன் நகை திருட்டு
Byமாலை மலர்18 Jan 2021 1:41 AM GMT (Updated: 18 Jan 2021 1:41 AM GMT)
பொங்கல் பண்டிகைக்காக சொந்த ஊர் சென்றிருந்தவரின் வீட்டின் பூட்டை உடைத்து 20 பவுன் நகை மற்றும் பணத்தை மர்மநபர்கள் திருடிச்சென்றுவிட்டனர்.
பூந்தமல்லி:
சென்னை அண்ணா நகர், 6-வது அவென்யூ பகுதியை சேர்ந்தவர் நடராஜன் (வயது 55). இவர், பொங்கல் பண்டிகையை கொண்டாடுவதற்காக வீட்டை பூட்டிவிட்டு தன் குடும்பத்துடன் சொந்த ஊரான புதுக்கோட்டைக்கு சென்று விட்டார்.நேற்று நடராஜன் வீட்டை சுத்தம் செய்ய வந்த பெண், வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டு இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார். இதுகுறித்து நடராஜனுக்கு செல்போன் மூலமாக தகவல் கொடுத்தார். பின்னர் அண்ணாநகர் போலீசாருக்கும் தகவல் தெரிவித்தார்.
சம்பவ இடத்துக்கு வந்த போலீசார், திருட்டு நடந்த வீட்டில் விசாரணை நடத்தினர். அதில், நடராஜன் குடும்பத்துடன் சொந்த ஊர் சென்று இருப்பதை அறிந்து கொண்ட மர்மநபர்கள், அவரது வீட்டின் பூட்டை உடைத்து உள்ளே புகுந்து பீரோவில் இருந்த 20 பவுன் நகை மற்றும் பணத்தை திருடிச்சென்றது தெரிந்தது.
எனினும் நடராஜன் திரும்பி வந்த பின்னர்தான் எவ்வளவு நகை, பணம் திருட்டு போனது? என்பது தெரியவரும் என போலீசார் தெரிவித்தனர். மேலும் இதுபற்றி அண்ணாநகர் போலீசார் விசாரித்து வருகின்றனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X