என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
ஆம்பூர் அருகே மினிலாரி மீது கார் மோதி பெண் பலி
Byமாலை மலர்16 Jan 2021 8:27 AM GMT (Updated: 16 Jan 2021 8:27 AM GMT)
ஆம்பூர் அருகே மினிலாரி மீது கார் மோதி பெண் பலியான சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
ஆம்பூர்:
சென்னையில் இருந்து திருப்பத்தூர் நோக்கி ஒரு கார் சென்றது. காரை ஆல்பர்ட் (வயது 40) என்பவர் ஓட்டி வந்தார். இந்த காரில் பூந்தமல்லி பகுதியை சேர்ந்த மேரி (55), சசிகுமார் (38), அவரது மனைவி ஆனந்தி (31), ராபர்ட்பால் (60), சமாதானம் (55) ஆகியோர் வந்தனர்.
ஆம்பூர் அருகே சின்னகொம்மேஸ்வரம் தேசிய நெடுஞ்சாலையில் நேற்று காலை 11 மணி அளவில் வந்தபோது திடீரென காரின் டயர் வெடித்தது இதனால் கட்டுப்பாட்டை இழந்த கார் தடுப்பு சுவரை தாண்டி எதிர் திசை சாலையில் சென்றது.. அப்போது எதிரே தேவக்கோட்டை பகுதியை சேர்ந்த ஜேம்ஸ் (45) என்பவர் ஒட்டி வந்த மினிலாரி மீது கார் மோதியது இந்த விபத்தில் சமாதானம் (55) என்ற பெண் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். 6 பேர் படுகாயம் அடைந்தனர்.
இதுகுறித்து தகவலறிந்து வந்த ஆம்பூர் தாலுகா போலீசார் காயமடைந்தவர்களை மீட்டனர். இதில் 4 பேரை வேலூர் அரசு மருத்துவமனைக்கும் 2 பேரை ஆம்பூர் அரசு மருத்துவமனைக்கும் ஆம்புலன்ஸ் மூலம் அனுப்பி வைத்தனர். மேலும் இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X