என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
உடுமலையில் ஆசிரியர் வீட்டில் 12½ பவுன் நகை, ரூ.1¼ லட்சம் திருட்டு
Byமாலை மலர்15 Jan 2021 3:40 AM GMT (Updated: 15 Jan 2021 3:40 AM GMT)
உடுமலையில் ஓய்வு பெற்ற ஆசிரியர் வீட்டில் பூட்டை உடைத்து ரூ.1லட்சத்து 38 ஆயிரம் மற்றும் 12½ பவுன் நகையை மர்ம ஆசாமிகள் திருடி சென்று விட்டனர்.
உடுமலை:
உடுமலை தண்டாயுதபாணி லே-அவுட் பகுதியைச் சேர்ந்தவர் ராஜேந்திரன் (வயது 62). ஓய்வுபெற்ற முதுநிலை பட்டதாரி ஆசிரியர். சம்பவத்தன்று இவர் தனது குடும்பத்துடன் மதுரை கோவிலுக்கு சென்றுள்ளார். அங்கு சாமி கும்பிட்டு விட்டு பின்னர் இரவு 7 மணியளவில் வீட்டிற்கு திரும்பி வந்தனர். அப்போது வீட்டின் கிரில் கதவில் பூட்டபட்டிருந்த பூட்டு உடைக்கப்பட்டிருந்தது. மெயின் கதவும் உடைக்கப்பட்டிருந்தது.
இதனால் அதிர்ச்சி அடைந்து வீட்டின் உள்ளே சென்று பார்த்தபோதுவீட்டினுள் இருந்த 2 பீரோக்களும் உடைக்கப்பட்டு கதவுகள் திறந்திருந்தது. அதில் ஒரு பீரோவில் வைத்திருந்த ரூ.1 லட்சத்து 38 ஆயிரம் மற்றொரு பீரோவில் வைக்கப்பட்டிருந்த செயின், டாலர் செயின், மோதிரம்உள்பட 12½ பவுன் நகை ஆகியவை திருட்டு போய் இருந்தது.
இதுகுறித்து ராஜேந்திரன் உடுமலை போலீசில் புகார் செய்தார். இந்த புகாரின் பேரில் உடுமலை குற்றப்பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்து பூட்டை உடைத்து நகை, பணம் ஆகியவற்றை திருடிச்சென்ற மர்ம ஆசாமிகளை தேடி வருகின்றனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X