என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
குடும்பத்தகராறில் தூக்குப்போட்டு பெண் தற்கொலை
Byமாலை மலர்12 Jan 2021 6:25 PM GMT (Updated: 12 Jan 2021 6:25 PM GMT)
குடும்பத்தகராறில் பெண் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
வீரபாண்டி:
கொல்கத்தாவில் உள்ள பர்கனஸ் ஹாட் கோலா கோபால் நகர் பகுதியைச் சேர்ந்தவர் பிரதோஷ மோகன்டோ (வயது 25), கூலி தொழிலாளி. இவருடைய மனைவி ராகினி மோகன்டோ (24). இருவரும் திருப்பூர் மங்கலம் சாலை சின்னையன் கவுண்டன்புதூர் குமாரசாமி தோட்டத்தில் வசித்து வந்தனர். இவர்களுக்கு 5 வயது மகள் உள்ளது.
இந்தநிலையில் பிரதோஷ மோகன்டோவுக்கு ஏற்கனவே வேறு பெண்ணுடன் தொடர்பு இருந்ததாக தெரிகிறது. இதனால் கணவன்-மனைவி இடையே தகராறு வந்துள்ளது. நேற்று முன்தினம் இது தொடர்பாக இருவரும் வாக்குவாதம் ஏற்பட்டது. அதன்பின்னர் பிரதோஷ மோகன்டோ வெளியே சென்றுவிட்டார். இந்த நிலையில், சிறுமி வெளியே விளையாடிக்கொண்டிருந்தபோது ராகினி மோகன்டோ வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
பின்னர் சிறுமியின் அழுகை சத்தம் கேட்டு அருகில் இருந்தவர்கள் சென்று பார்த்தனர். அப்போது ராகினி மோகன்டோ தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டது தெரியவந்தது. தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த மத்திய போலீசார் பெண்ணின் உடலை மீட்டு திருப்பூர் அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பிவைத்தனர். மேலும் தற்கொலை குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
கொல்கத்தாவில் உள்ள பர்கனஸ் ஹாட் கோலா கோபால் நகர் பகுதியைச் சேர்ந்தவர் பிரதோஷ மோகன்டோ (வயது 25), கூலி தொழிலாளி. இவருடைய மனைவி ராகினி மோகன்டோ (24). இருவரும் திருப்பூர் மங்கலம் சாலை சின்னையன் கவுண்டன்புதூர் குமாரசாமி தோட்டத்தில் வசித்து வந்தனர். இவர்களுக்கு 5 வயது மகள் உள்ளது.
இந்தநிலையில் பிரதோஷ மோகன்டோவுக்கு ஏற்கனவே வேறு பெண்ணுடன் தொடர்பு இருந்ததாக தெரிகிறது. இதனால் கணவன்-மனைவி இடையே தகராறு வந்துள்ளது. நேற்று முன்தினம் இது தொடர்பாக இருவரும் வாக்குவாதம் ஏற்பட்டது. அதன்பின்னர் பிரதோஷ மோகன்டோ வெளியே சென்றுவிட்டார். இந்த நிலையில், சிறுமி வெளியே விளையாடிக்கொண்டிருந்தபோது ராகினி மோகன்டோ வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
பின்னர் சிறுமியின் அழுகை சத்தம் கேட்டு அருகில் இருந்தவர்கள் சென்று பார்த்தனர். அப்போது ராகினி மோகன்டோ தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டது தெரியவந்தது. தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த மத்திய போலீசார் பெண்ணின் உடலை மீட்டு திருப்பூர் அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பிவைத்தனர். மேலும் தற்கொலை குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X