search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கைது
    X
    கைது

    சாராய வியாபாரிகள் 2 பேர் குண்டர் சட்டத்தில் கைது

    தஞ்சை அருகே சாராய வியாபாரிகள் 2 பேர் குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டனர்.
    தஞ்சாவூர்:

    தஞ்சை மாவட்டம் பட்டுக்கோட்டையை அடுத்த சொக்கநாதபுரம் கீழபூவாணம் பகுதியை சேர்ந்தவர் முருகேசன் (வயது40). திருவிடைமருதூர் தாலுகா திருவாய்பாடி கிராமம் வடக்கு தெருவை சேர்ந்தவர் நடராஜன். இவருடைய மகன் அன்பு (32). சாராய வியாபாரிகளான இவர்கள் 2 பேரையும் குண்டர் சட்டத்தில் கைது செய்யக்கோரி தஞ்சை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு தே‌‌ஷ்முக்சேகர் சஞ்சய் கலெக்டர் கோவிந்தராவுக்கு பரிந்துரை செய்தார். இதையடுத்து கலெக்டர் உத்தரவின் பேரில் பட்டுக்கோட்டை மதுவிலக்கு அமல்பிரிவு போலீஸ் இன்ஸ்பெக்டர் உ‌ஷா, கும்பகோணம் மேற்கு போலீஸ் இன்ஸ்பெக்டர் அழகேசன் ஆகியோர் குண்டர் சட்டத்தின் கீழ் முருகேசன், அன்பு ஆகியோரை கைது செய்து திருச்சி மத்திய சிறையில் அடைத்தனர்.
    Next Story
    ×