என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
புதுமண தம்பதிகளுக்கு கொடுப்பதற்காக பொங்கல்படி பொருட்கள் வாங்க மக்கள் கூட்டம் அலைமோதியது
Byமாலை மலர்11 Jan 2021 1:20 PM GMT (Updated: 11 Jan 2021 1:20 PM GMT)
பொங்கல் பண்டிகையை முன்னிட்டு, புதுமண தம்பதிகளுக்கு பொங்கல்படி கொடுப்பதற்காக, பொருட்கள் வாங்க கூட்டம் அலைமோதியது.
நெல்லை:
தமிழர் திருநாளாம் தைப்பொங்கல் பண்டிகை வருகிற 14-ந்தேதி (வியாழக்கிழமை) உற்சாகமாக கொண்டாடப்படுகிறது. இதையொட்டி பொங்கலுக்கு தேவையான காய்கறிகள், மண்பானைகள், மஞ்சள் குலைகள், கரும்புகள் மற்றும் சீர்வரிசை பொருட்கள் போன்றவற்றின் விற்பனை களைகட்டியுள்ளது.
நெல்லை, தென்காசி, தூத்துக்குடி மாவட்டங்களில் பொங்கல் பண்டிகையையொட்டி, பொதுமக்கள் திருமணமான தங்களுடைய மகள் மற்றும் சகோதரிகளுக்கும், தங்கள் வீட்டு புதுமண தம்பதிகளுக்கும் பொங்கல்படி கொடுப்பது வழக்கம்.
இந்த பொங்கல்படியில் அரிசி, பருப்பு, சர்க்கரை பொங்கலுக்கு தேவையான பொருட்கள் மற்றும் காய்கறிகள் கரும்பு, மஞ்சள் குலை, பனங்கிழங்கு மற்றும் பானைகள் உள்ளிட்ட வீட்டு உபயோக பொருட்களை வாங்கி கொடுப்பர்.
இந்த பொங்கல்படி கொடுப்பதற்கான பொருட்கள் வாங்குவதற்காக நெல்லை, பாளையங்கோட்டையில் உள்ள காய்கறி மார்க்கெட்டுகளிலும், பாத்திர கடைகளிலும், வீட்டு உபயோக பொருட்கள் கடைகளிலும் நேற்று மக்கள் கூட்டம் அலைமோதியது. பித்தளை பாத்திரங்களையும் பெரும்பாலானவர்கள் ஆர்வமுடன் வாங்கி சென்றனர்.
பொங்கல் பண்டிகையை முன்னிட்டு, நெல்லை மார்க்கெட்டுக்கு கரும்பு, மஞ்சள் குலை போன்றவற்றை வியாபாரிகள் விற்பனைக்காக கொண்டு வரத்தொடங்கினர். தேனியிலிருந்து கரும்பு கட்டுகள் நெல்லைக்கு கொண்டு வரப்பட்டு உள்ளது. எனினும் கடந்த ஆண்டைவிட கரும்பு கட்டுகள் வரத்து குறைவாகவே உள்ளது.நெல்லை பகுதியில் விளைவிக்கப்பட்ட மஞ்சள் குலைகளையும் அறுவடை செய்து விற்பனைக்கு கொண்டு வந்தனர். இவற்றை பொதுமக்கள் ஆர்வமுடன் வாங்கி சென்றனர்.
நெல்லை மாவட்டத்தில் நேற்று பரவலாக மழை பெய்ததால் பொங்கல்படி கொடுக்க செல்பவர்கள் அதிகம் சிரமப்பட்டனர். லோடு ஆட்டோவில் பொங்கல்படி கொண்டு செல்ல முடியாத நிலை ஏற்பட்டது. இதனால் வேன் மற்றும் கார்களில் பொங்கல்படி கொண்டு சென்றனர்.
புதுமண தம்பதியர்களுக்கு இன்றும் (திங்கட்கிழமை) நாளை மறுநாளும் (புதன்கிழமை) பொங்கல்படி அதிகளவில் கொடுப்பார்கள். இதனால் பொங்கல்படி பொருட்கள் விற்பனை களைகட்டியது.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X