என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
சத்திரப்பட்டி அருகே மோட்டார் சைக்கிள் மோதி முதியவர் பலி
Byமாலை மலர்10 Jan 2021 5:44 PM GMT (Updated: 10 Jan 2021 5:44 PM GMT)
சத்திரப்பட்டி அருகே மோட்டார் சைக்கிள் மோதியதில் படுகாயமடைந்த முதியவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார்.
சத்திரப்பட்டி:
ஒட்டன்சத்திரம் அருகே உள்ள காவேரியம்மாபட்டியை சேர்ந்தவர் சரவணமூர்த்தி. இவர் நேற்று முன்தினம் மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தார். அப்போது சத்திரப்பட்டி அருகே விருப்பாச்சி மேடு பகுதியில் நடந்து சென்ற 60 வயது மதிக்கத்தக்க முதியவர் மீது அவருடைய மோட்டார் சைக்கிள் மோதியது. இதில் படுகாயமடைந்த முதியவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார். அங்கு இருந்து சரவணமூர்த்தி தப்பி சென்று விட்டார். ‘
இதுகுறித்து தகவலறிந்த சத்திரப்பட்டி போலீஸ் இன்ஸ்பெக்டர் முருகேஸ்வரி மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து விசாரணை நடத்தினர். விபத்தில் இறந்த முதியவர் யார்?, அவர் எந்த ஊரை சேர்ந்தவர் என்பது தெரியவில்லை. அவருடைய உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ஒட்டன்சத்திரம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து தப்பி ஓடிய சரவணமூர்த்தியை தேடி வருகின்றனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X