search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கோப்புப்படம்
    X
    கோப்புப்படம்

    சத்திரப்பட்டி அருகே மோட்டார் சைக்கிள் மோதி முதியவர் பலி

    சத்திரப்பட்டி அருகே மோட்டார் சைக்கிள் மோதியதில் படுகாயமடைந்த முதியவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார்.
    சத்திரப்பட்டி:

    ஒட்டன்சத்திரம் அருகே உள்ள காவேரியம்மாபட்டியை சேர்ந்தவர் சரவணமூர்த்தி. இவர் நேற்று முன்தினம் மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தார். அப்போது சத்திரப்பட்டி அருகே விருப்பாச்சி மேடு பகுதியில் நடந்து சென்ற 60 வயது மதிக்கத்தக்க முதியவர் மீது அவருடைய மோட்டார் சைக்கிள் மோதியது. இதில் படுகாயமடைந்த முதியவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார். அங்கு இருந்து சரவணமூர்த்தி தப்பி சென்று விட்டார். ‘

    இதுகுறித்து தகவலறிந்த சத்திரப்பட்டி போலீஸ் இன்ஸ்பெக்டர் முருகேஸ்வரி மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து விசாரணை நடத்தினர். விபத்தில் இறந்த முதியவர் யார்?, அவர் எந்த ஊரை சேர்ந்தவர் என்பது தெரியவில்லை. அவருடைய உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ஒட்டன்சத்திரம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து தப்பி ஓடிய சரவணமூர்த்தியை தேடி வருகின்றனர்.
    Next Story
    ×