search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கோப்பு படம்.
    X
    கோப்பு படம்.

    திருப்பூரில் மின்சாரம் தாக்கி ஒப்பந்த ஊழியர் பலி

    திருப்பூரில் மின்கம்பத்தில் வேலை செய்து கொண்டிருந்த ஒப்பந்த ஊழியர் மின்சாரம் தாக்கி பலியானார்.
    அனுப்பர்பாளையம்:

    நெல்லை மாவட்டத்தை சேர்ந்தவர் அஜீத்குமார் (வயது 21). இவர் திருப்பூரை அடுத்த தேவராயம்பாளையத்தில் தங்கி திருப்பூர் மாநகராட்சியின் கீழ் தனியார் ஒப்பந்ததாரரிடம் தெருவிளக்குகள் பழுது நீக்கும் வேலை செய்து வந்தார்.

    நேற்று மதியம் சாமுண்டிபுரத்தை அடுத்த ஏ.வி.எம். லேஅவுட் பகுதியில் மின்கம்பத்தில் வேலை பார்த்து கொண்டிருந்த அஜீத்குமார் திடீரென மின்சாரம் தாக்கியதில் தூக்கி வீசப்பட்டார். அக்கம் பக்கத்தினர் அவரை மீட்டு திருப்பூர் அரசு ஆஸ்பத்திரிக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றனர். அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர் ஏற்கனவே அவர் இறந்து விட்டதாக தெரிவித்தார். இதுகுறித்து 15 வேலம்பாளையம் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
    Next Story
    ×