என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
வத்தலக்குண்டு அருகே கார்-மோட்டார் சைக்கிள் மோதல்: ஆட்டோ டிரைவர் பலி
Byமாலை மலர்8 Jan 2021 10:32 PM GMT (Updated: 8 Jan 2021 10:32 PM GMT)
வத்தலக்குண்டு அருகே மோட்டார் சைக்கிள் மீது கார் மோதிக் கொண்ட விபத்தில் ஆட்டோ டிரைவர் சம்பவ இடத்திலேயே இறந்தார்.
பட்டிவீரன்பட்டி:
திண்டுக்கல் மாவட்டம் வத்தலக்குண்டு அருகேயுள்ள ஜி.தும்மலபட்டியை சேர்ந்தவர் சேக்பரீத் (வயது 21). ஆட்டோ டிரைவர். நேற்று முன்தினம் அவர் வத்தலக்குண்டுவில் இருந்து திண்டுக்கல் நோக்கி மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தார். அப்போது பட்டிவீரன்பட்டி அருகே உள்ள லட்சுமிபுரத்தில் வந்தபோது, வத்தலக்குண்டு காந்தி நகரை சேர்ந்த சம்சுல்உதா (52) என்பவர் ஓட்டி வந்த கார் ஷேக்பரீத் மோட்டார் சைக்கிள் மீது எதிர்பாராதவிதமாக மோதியது.
இதில் படுகாயமடைந்த ஷேக்பரீத் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார். சம்சுல்உதா காயமடைந்தார். அவரை அக்கம்பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக வத்தலக்குண்டு அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். இதுகுறித்து பட்டிவீரன்பட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X